‘மாமனிதன்’ & ‘கடைசி விவசாயி’ படங்களுடன் கனெக்ட்டான ‘காலங்களில் அவள் வசந்தம்’

‘மாமனிதன்’ & ‘கடைசி விவசாயி’ படங்களுடன் கனெக்ட்டான ‘காலங்களில் அவள் வசந்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலரை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார்.

சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி மாநில செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ மற்றும் ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட், ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தை இயக்குநர் பிரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸுக்கு கதை எழுதி அனுபவம் பெற்றவருமான ராகவ் மிர்தாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

புதுமுகம் கவுசிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர்…

“காதல் என்றால் வெறும் ஆண் பெண் கவர்ச்சியா இல்லை அதையும் தாண்டிய ஒரு உணர்வா என்னும் கேள்விக்கு விடை தேடும் ஒரு ஜனரஞ்சகமான ரொமாண்டிக் திரைப்படமே ‘காலங்களில் அவள் வசந்தம்’,” என்றார்.

‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்திற்கு கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்க, லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

வானவில்லின் அழகிய காட்சியில் கணவருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சினேகா!

வானவில்லின் அழகிய காட்சியில் கணவருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சினேகா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிறந்த நாளான இன்று காலை தனது காதல் கணவர் பிரசன்னாவுடன் எப்படி மகிழ்ந்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்

சினேகாவின் பிறந்த நாளைக் கொண்டாட இருவரும் ஒரு காதல் பயணத்திற்கு புறப்பட்டனர்.

அழகான இந்த ஜோடி க்கு பின்னால் இயற்கையின் அம்சமான வானவில் தோன்றி மேலும் அழகான காட்சியாக தெரிகிறது.

தனது நாளின் படங்களைப் பகிர்ந்து கொண்ட சினேகா, “இயற்கை அன்னையின் ஆசீர்வாதத்துடன் பிறந்தநாள் தொடங்குகிறது!!!” என பதிவிட்டுள்ளார்

‘பவுடர்’ பட சம்பவம்.; நிஜத்தில் மனிதக்கறி சாப்பிட்ட தம்பதி.; அன்றே கணித்த விஜய்ஸ்ரீ

‘பவுடர்’ பட சம்பவம்.; நிஜத்தில் மனிதக்கறி சாப்பிட்ட தம்பதி.; அன்றே கணித்த விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘பவுடர்’.

இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி ஆதவன், அனித்ரா நாயர், இளையா, வையாபுரி, ஒற்றன்துரை, சதீஷ் முத்து ராமராஜன், சில்மிஷம் சிவா, தர்மா, விக்கி, முருகன், அர்ஜுன், மனோ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, ராஜபாண்டி & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த படத்தை மோகன்ராஜ் என்பவர் இணை தயாரிப்பாளராக தயாரித்து வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது.

இதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக மனிதக்கறி வேட்டை இடம் பெற்றது.

வட இந்தியாவில் அகோரிகள் மத்தியில் மனிதக்கறி என்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இது தமிழகத்திற்கு ஊடுருவி வருவதாக இந்த படத்தில் காட்சிகள் வைத்துள்ளார் விஜய்ஸ்ரீ.

தமிழகத்தில் இல்லாத ஒன்றை இயக்குனர் காட்சிகளாக வைத்திருப்பது நெட்டிசன் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நரபலி கொடுத்த மனித உடலை கறி போல வெட்டி துண்டு துண்டாக சாப்பிட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர் 2 தமிழக பெண்கள்….

சடலங்களை 56 துண்டுகளாக வெட்டி மாமிசம் சாப்பிட்டதாக கேரள தம்பதியினர் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதன்மூலம் விஜய்ஸ்ரீ இயக்கிய ‘பவுடர்’ படத்தின் காட்சிகள் தற்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Powder movie human meat controversy now happened at Kerala

Here’s #Powder official trailer

https://www.filmistreet.com/video/powder-official-trailer/

புதிய பெற்றோர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கார்த்தியின் அன்பின் அடையாளம்!

புதிய பெற்றோர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கார்த்தியின் அன்பின் அடையாளம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சமீபத்தில் பெற்றோர்களாகி இரட்டை ஆண் குழந்தைகளை தங்கள் வாழ்க்கையில் வரவேற்றனர்.

இப்போது, ​​​​இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான நடிகர் கார்த்தி, நயன் மற்றும் விக்கியை மனதார வாழ்த்தியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ நடிகர் கார்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு மலர் கொத்து அனுப்பினார்.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் OTT ரிலீஸ் தேதி!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் OTT ரிலீஸ் தேதி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஹிட் காம்போ சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணைந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15 அன்று திரைக்கு வந்தது.

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் அதன் பட்ஜெட்டை விட இருமடங்காக வசூலித்ததால் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே சமீபத்திய ஹாட் அப்டேட் என்னவென்றால், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ‘வென்று தணிந்தது காடு’ ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பில்லாத கோமாளிகள் – நயன்தாராவின் பிரசவ சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

மதிப்பில்லாத கோமாளிகள் – நயன்தாராவின் பிரசவ சர்ச்சைக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

40 வயதான நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தார், இது இந்தியாவில் சட்டவிரோதமானது என்று சிலர் சர்ச்சையை எழுப்பினர்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “அன்பான பெற்றோருக்கு பிறந்த 2 அப்பாவி குழந்தைகளின் பிறப்பை விட அழகானது எது, எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டிய வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கவும் கொடுக்கவும் முடியும்.

ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுத்தால் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்

More Articles
Follows