தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்யின் சர்கார் திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.
இதை முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாக்கியிருந்தார் முருகதாஸ்.
தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி தீயில் எறிவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றன.
மேலும் இப்படத்தில் வரலட்சுமியின் வில்லி கேரக்டருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை (கோமளவள்ளி) சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது.
எனவே அதிமுக அமைச்சர்கள் தங்களுடைய எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ள சர்கார் பேனர்கள் அகற்றப்பட்டது.
சென்னை ராயபேட்டையிலும் திரையரங்கு முன்னதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு நாளை பிற்பகல் படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்படும் காட்சிகள் குறித்து இன்று முடிவு செய்து, நீக்கப்பட்டு நாளை திரையிடப்படும்.
காட்சிகள் நீக்கப்படுவது குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவினர் புண்படக்கூடாது என்பதை எங்களுடைய இலக்காகும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sarkar team agree to remove controversial scenes after ADMK party protest