Breaking அடிப்பணிந்தது விஜய்யின் சர்கார்.; காட்சிகளை நீக்க முடிவு

Breaking அடிப்பணிந்தது விஜய்யின் சர்கார்.; காட்சிகளை நீக்க முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar team agree to remove controversial scenes after ADMK party protest

விஜய்யின் சர்கார் திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.

இதை முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாக்கியிருந்தார் முருகதாஸ்.

தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி தீயில் எறிவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றன.

மேலும் இப்படத்தில் வரலட்சுமியின் வில்லி கேரக்டருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை (கோமளவள்ளி) சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது.

எனவே அதிமுக அமைச்சர்கள் தங்களுடைய எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ள சர்கார் பேனர்கள் அகற்றப்பட்டது.

சென்னை ராயபேட்டையிலும் திரையரங்கு முன்னதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு நாளை பிற்பகல் படம் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்படும் காட்சிகள் குறித்து இன்று முடிவு செய்து, நீக்கப்பட்டு நாளை திரையிடப்படும்.

காட்சிகள் நீக்கப்படுவது குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவினர் புண்படக்கூடாது என்பதை எங்களுடைய இலக்காகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Sarkar team agree to remove controversial scenes after ADMK party protest

மெரினா புரட்சி-க்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை

மெரினா புரட்சி-க்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு மீண்டும் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marina Puratchi movie and 2nd Revising Committee news updatesஜல்லிக்கட்டு போராட்டத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் M.S. ராஜ் இயக்கத்தில் உருவான மெரினா புரட்சி படத்தைப் பார்த்த Censor Board Examination Committee எந்த காரணமும் சொல்லாமல் படத்தை Revising Committee க்கு அனுப்பினர்.

தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான Revising Committee குழு எந்த காரணமும் சொல்லாமல் மீண்டும் தடை விதித்துள்ளனர்.

Indian Cinematograph Act 1983 விதியின்படி Revising Committee மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை.

ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2nd Revising Committee க்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்.

Marina Puratchi movie and 2nd Revising Committee news updates

பூர்ணா நடிப்பில் உருவாகும் சமூக த்ரில்லர் படம் *புளு வேல்*

பூர்ணா நடிப்பில் உருவாகும் சமூக த்ரில்லர் படம் *புளு வேல்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Poorna Starring Blue Whale will be a social thriller movieகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது.

இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது.

இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளுவேல்’ விளையாட்டு.

ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம்.

அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளு வேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும்.

மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர்.

அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.

சமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா.

அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் : இயக்கம் – T.ரங்கநாதன், இசை – PC ஷிவன், ஒளிப்பதிவு – KK, படத்தொகுப்பு – ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம், கலை – NK ராகுல். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Poorna Starring Blue Whale movie will be a social thriller

3 வாரத்தில் 50 லட்சம் செலவில் *அமுதா*வை இயக்கிய அர்ஜூன்

3 வாரத்தில் 50 லட்சம் செலவில் *அமுதா*வை இயக்கிய அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amudha movie completed within 3 weeks with 50 lakhs PS. அர்ஜூன் என்கிற புதுமுக இயக்குனரின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அமுதா”. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு கொலை அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள் , யார் கொலையாளி , எதற்காக இந்த கொலை நடக்கிறது என்கிற புதிரான திரைக்கதையில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் PS அர்ஜுன்.

படத்தில் மூன்று பாடல்கள், ஜெயச்சந்திரன், சித்ரா மற்றும் வினித் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்கள். இசை அருண் கோபன்.

மூன்று வித கதையோட்டத்தில் விறுவிறுப்பான ஒரு திரில்லர் படத்தை குறைந்த பட்ஜெட்டில் படமாக்கியிருக்கிறார்கள்.

விரைவில் அமுதா திரைக்கு வர இருக்கிறது.

Amudha movie completed within 3 weeks with 50 lakhs

2.0 பட 6வது ரிலீல் என்ன அதிசயம்..? ஏஆர். ரஹ்மான் சர்ப்ரைஸ் ட்வீட்

2.0 பட 6வது ரிலீல் என்ன அதிசயம்..? ஏஆர். ரஹ்மான் சர்ப்ரைஸ் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman surprise tweet about 2point0 movie 6th reelலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’.

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் 3D டிரைலரை மிகப்பிரம்மாண்டமான முறையில் சென்னையில் வெளியிட்டனர்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதியன்று வெளியிட்டனர்.

இம்மாதம் இறுதியில் நவம்பர் 29-ஆம் தேதி இப்படத்தை லைகா நிறுவனம் உலகமெங்கும் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், ‘2.0’வின் ஆறாவது ரீல் காட்சிகளுக்கான மிக்சிங் வேலைகளை செய்து வருவதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் Mixing reel 6 #2point0 OMG ,.emotional and sci-fi Epic ! என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களோ தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்.

தன் படங்கள் என்றாலும் ஏதாவது பாடல், டிரைலர் வெளியிட்டு தேதியை பற்றிதான் ட்வீட் செய்வார்.

தற்போது அவராகவே முன் வந்து ‘2.0’ பட காட்சிகள் குறித்து பதிவிட்டுள்ளது இந்திய சினிமாவை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

எனவே ரசிகர்கள் எதிர்பார்க்கும் சர்ப்ரைஸ் நிச்சயம் இருக்கும் என நம்பலாம்.

AR Rahman surprise tweet about 2point0 movie 6th reel

Exclusive சர்கார் வில்லன் பழ.கருப்பையாவிடம் தன் அரசியலை உறுதிசெய்த விஜய்

Exclusive சர்கார் வில்லன் பழ.கருப்பையாவிடம் தன் அரசியலை உறுதிசெய்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar Villain Pala Karuppiah confirms Vijays Political entry

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் அதிமுக அரசுக்கு எதிரான சில காட்சிகள் உள்ளது.

எனவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் வேண்டும் எனவும் விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் எனவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

இப்பட பிரச்சினை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சர்கார் பட வில்லனுமான பழ.கருப்பையா கூறியதாவது:-

ஒரு படம் தணிக்கை குழு அனுமதித்து வெளிவந்து விட்ட பிறகு ஒவ்வொருவரும் இதை நீக்கு, அதை நீக்கு என்று சொன்னால் தணிக்கை குழுவுக்கு வேலையே இருக்காது.

எல்லாரிடமும் ஓட்டெடுப்பு நடத்திவிட்டு ஒரு படத்தை வெளியிட முடியாது. அதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்த குழு இதை அனுமதித்து இருக்கிறது.

நான் பேசிய நிறைய வசனங்கள் அதில் மியூட் செய்யப்பட்டுள்ளது. எனது குரல் ஒடுக்கப்பட்டுள்ளது. வெறும் வாய் மட்டும் அசையும்.

15 வயதில் டவுசர் போட்டுக் கொண்டு இந்தியை எதிர்த்தேன் என்று சொன்னால் அது கலைஞரை குறித்துவிடும் என்பதற்காக அதை நீக்கினார்கள்.

இந்த படம் முழுவதும் நிகழ்கால அரசியல் குறித்ததுதான். நிகழ்கால அரசியல் மதிக்கத்தக்கதாக இருக்கிறதா என்று நானே கேட்கிறேன்.

இலவசத்தின் மூலம்தான் ஆட்சி நடத்துகிறீர்கள். கமி‌ஷன் வாங்காத, ஊழல் செய்யாத துறை என்று ஒரு துறையுமே கிடையாது. நாட்டிலே மணலை இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள்.

நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வருவார். இது என்னுடைய கருத்து. இந்த படம் முழுவதும் அவருடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்த சமூகத்துக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அதனால் இப்போது வருவாரா? என்று எனக்கு தெரியாது.

அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. பெரிய வலிமையான வயது இருக்கிறது. 40 வயதில் 20 வயது பையன் போல இருக்கிறார்.

அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது அரசியலுக்கு வருவாரா என்று எனக்கு தெரியாதே தவிர அவர் உறுதியாக அரசியலுக்கு வருவார்.

“தனக்கு ஒரு நல்ல குடும்பம் இருக்கிறது. மனைவி இருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். பணம் வழிந்தோடுகிறது.

எனவே இவ்வளவு அன்பு செலுத்திய மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். மிகச்சிறந்த சிந்தனை. நாள் தள்ளிப் போடாமல் இதை செய்யுங்கள் என்று சொன்னேன்.

இவ்வாறு பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.

Sarkar Villain Pala Karuppiah confirms Vijays Political entry

More Articles
Follows