தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள திரைப்படம் சர்க்கார்.
வருகிற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று இந்த படத்தை திரைக்கு கொண்டு வரவிருக்கிறது சன் பிக்சர்ஸ்.
வெளிநாட்டில் வாழும் தொழில் அதிபரான விஜய், தேர்தலில் ஓட்டு போட தமிழ்நாடுக்கு வருகிறார். அவருடைய ஓட்டை வேறு யாரோ போட்டு விடுகிறார்கள்.
இதனால் ஆத்திரம் அடையும் விஜய், அரசியல்வாதிகளை எதிர்த்து களமிறங்குகிறார். அவர் அமைக்கும் சர்காரே இதன் ஒன்லைன்.
இந்தக் கதை தன்னுடையது எனவும் செங்கோல் என்ற தலைப்பில் இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன் எனவும் வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் சர்கார் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு அக்டோபர் 30ஆம் தேதி வரை தடையில்லை எனவும், வழக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் சர்கார் கதையும், செங்கோல் கதையும் ஒன்றுததான்” என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் என்கிற முறையில் கே.பாக்யராஜ் அதிகாரபூர்மாக கடிதம் கொடுத்துள்ளார்.
அந்த கடித்தில் அவர் எழுதியிருப்பதாவது:
தெளிவாக விவாதித்து, ஒரு சிலர் கருத்து வேறுபட்டிருந்தாலும், மெஜாரிட்டி மெம்பர்களின் ஒப்புதலின் பேரில் தெளிவாக செங்கோல் என்ற கதையும், சர்கார் என்ற கதையும் ஒன்றே என்று முடிவு செய்தோம்.
இக்கடிதத்தின் மூலம் சங்கத்தின் உறுப்பினரான வருண் என்கிற ராஜேந்திரன் ஆகிய உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் 21.11.2007ம் ஆண்டு பதிவு செய்த செங்கோல் என்ற கதையும் சர்கார் என்ற கதையும் ஒன்றே என்ற முடிவை சங்கம் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.
உங்கள் பக்க நியாயத்திற்காக நீங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம். முழுமையாக உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம். என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை வருண் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இது சர்கார் படத்துக்கு எதிரான ஆதாரமாக கூறப்படுகிறது. எனவே சர்கார் பட ரிலீசின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Sarkar Story controversy Murugadoss and Bhagyaraj clash issue