தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்ப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் முருகதாஸ் தன் கதையை திருடியதாக உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் செய்திருந்தார்.
இதனையடுத்து ‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் தெரிவித்து இருந்தார்.
இதனால் முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் இடையே மோதல் உருவானது.
இதற்கு சம்மதம் தெரிவிக்காத முருகதாஸ், பிரச்னையை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகக் கூற இந்த கதை திருட்டு சர்ச்சை பெரிதானது.
வருண் ராஜேந்திரன் இதை வழக்காக பதிவு செய்ய, 30ம் தேதி (இன்று ) வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து பிரச்னை கோர்ட்டுக்கு வர தற்போது, இருதரப்பும் பேசியதில், மேற்கண்ட சமரசம் எட்டப்பட்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
வருண் ராஜேந்திரனுக்கு 30 லட்ச ரூபாய் பணம் தந்துவிடுவதாகவும், படத்தின் டைட்டிலில் நன்றி என சொல்வதாகவும் முருகதாஸ் தரப்பு, வருண் ராஜேந்திரனிடம் பேசியதையொட்டி சமரசம் ஏற்பட்டுவிட்டது.
ஆக, முருகதாஸ் கதை திருடியது இதன் மூலம் உறுதியானது.
இந்த படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.