தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் படத்திற்கு மெர்சல் என்ற பெயரை அட்லி என்ன நினைத்து வைத்தாரோ? தெரியவில்லை.
ஆனால் தற்போது இந்திய அரசியலையே மெர்சலாக்கி வருகிறது.
படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்து வந்த இப்படம் ரிலீசுக்கு பின்னர், பாஜக.வினரின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
மேலும் மருத்துவர்களை ஒட்டுமொத்தமாக அவமதித்துவிட்டதாக மருத்துவர்களும் கொந்தளிந்துள்ளனர்.
இந்நிலையில், விஜய்யின் தந்தையும் புரட்சி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜய் பற்றி கூறியதாவது… “விஜய்யின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்.
விஜய் ஒரு காந்தியவாதி. அவர் ஒரு தலைவராக உருவாக வேண்டும். அவரை நம்பியுள்ளவர்களுக்கு நல்ல மாற்றத்தை தர வேண்டும்.
அவர் அரசியலுக்கு வருவாரா? எனத் தெரியவில்லை. அதை அவர்தான் முடிவு செய்வார். ஆனால் அவர் வரவேண்டும் என்பது என் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.
SA Chandrasekar talks about Vijay and his political entry