தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னைக்கு மிக அருகிலுள்ள பையனூரில் எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்துடன் திரைப்பட தொழிலாளர்களுக்கான குடியிருப்பும் கட்டப்படுகிறது.
அதாவது ஒரு சினிமா உருவாக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த நகரத்தில் இருக்கும்.
இதே நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்பு அரங்கம் கட்டுவதற்கு 5 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
இதன்படி ஒரு கோடி ரூபாயை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெப்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது…
தமிழக அரசும், முதல்வரும் திரைப்படத்துறைக்கு நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ‛சி.எம்.கேப்மாரி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார்.
இதற்கு எங்கள் கண்டத்தை தெரிவிக்கிறோம். அவர் பட டைட்டிலை மாற்ற வேண்டும்.
அதுபோல் தமிழர்களுக்கு எதிராக பேசி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அவருக்கும் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் அதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் ஆர்.கே.செல்வமணி கூறினார்.