தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவை பெண் என அடிக்கடி சொல்லிக் கொள்பவர் நடிகை அதுல்யா.
குறும்படங்களில் நடித்து வந்த இவர் காதல் கண் கட்டுதே என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அட்டா.. கொள்ளை அழகே இருக்காளே இந்த பெண் என இளைஞர்களை இவரை கொண்டாடினார். அழகான கண்களும் புருவமும் இவருக்கு ப்ளஸ் பாய்ண்டாக அமைந்தது.
இதனையடுத்து ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார்.
சமுத்திரக்கனியின் ஆஸ்தான நாயகியானது போல் அவரது படங்களில் தவறாமல் இடம் பிடித்து வருகிறார். நாடோடிகள் 2 மற்றும் அடுத்த சாட்டை படங்களில் நடித்துள்ளார் அதுல்யா.
கதை இல்லாமல் கூட சமுத்திரக்கனி படம் நடிப்பார் போல ஆனால் அதுல்யா இல்லாமல் அவரின் படம் இருக்காது என்னுமளவுக்கு ஏமாலி படத்திலும் அதுல்யா நடித்திருந்தார்.
அதில் சிகரெட் அடித்து அவரை சூடேற்றி ஆபாச காட்சிகளில் நடித்து இளைஞர்களை சூடேற்றினார். இதனால் ஹோம்லி இமேஜ்ஜில் இருந்த அதுல்யாவுக்கு இது ஆபத்தானது.
அண்மையில் வெளியான கேப்மாரி படம் அதுல்யாவின் இமேஜ்ஜை டோட்டலாக டேமேஜ் செய்துள்ளது.
இப்படி ஆபத்தான ரூட்டில் அதுல்யா பயணிப்பதால் விரைவில் கவர்ச்சி முத்திரை அவர் மீது குத்தப்பட வாய்ப்புள்ளது எனலாம். சுதாரித்துக் கொள்வாரா? அதுல்யா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Capmaari Athulya travels on danger route of Cinema