சினிமாவுக்கு வந்தபோது என் நிறத்தை கிண்டல் செய்தனர்..; அமைச்சர் முன்னிலையில் நடிகை ரோஜா ஆதங்கம்

சினிமாவுக்கு வந்தபோது என் நிறத்தை கிண்டல் செய்தனர்..; அமைச்சர் முன்னிலையில் நடிகை ரோஜா ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rojaசவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்த விழாவில் நடிகை ரோஜா எம் எல் ஏ பேசும்போது…

’நான் சினிமா துறைக்கு வந்தபோது என்னை பலர் கிண்டல் செய்தனர். நான் கொஞ்சம் கலர் கம்மி அதனால் வெற்றி பெற மாட்டேன் என்றனர்.

ஆனால் என்னை சினிமாவில் அழகாக காட்டி, கலரும் கூட்டி காட்டி ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர்கள் மேக் அப் மேன்கள்தான். இந்த விழா வுக்கு என்னை அழைத்தது மகிழ்ச்சி.

வீட்டில் விசேஷம் நடந்தால் மகளைதான் விளக்கு ஏற்ற வைப்பார்கள் அதபோல் இந்த விழாவில் என்னை விளக்கு ஏற்ற வைத்தி ருக்கிறார்கள்.

அரசியலில் நான் இன்றைக்கு பல போராட்டங் களை சந்தித்து வெற்றி பெற்ற தற்கு எனக்கு முன்னுதாரண மாக இருந்தவர் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா தான்’ என்றார்.

நிகழ்ச்சியில் விருகை வி.என்.ரவி எம் எல் ஏ, எஸ். சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பெப்ஸி நிர்வாகிகள் மற்ற சங்கங்களின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஏ.சபரி கிரிசன் நன்றி உரையாற்றினார்.

Actress Roja Selva Mani about her colour

கௌதம் மேனன்-விஜய் சேதுபதி-அமலா பால்-வருண்-மேகா இணைந்த படம் பிப்ரவரி 12ல் ரிலீஸ்

கௌதம் மேனன்-விஜய் சேதுபதி-அமலா பால்-வருண்-மேகா இணைந்த படம் பிப்ரவரி 12ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் ஆந்தாலஜி திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அண்மையில் அமேசான் பிரைம் வீடியோவில் ‘புத்தம் புதுக் காலை’ படமும், நெட்ஃப்ளிக்ஸில் ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படமும் வெளியாகின.

இந்த வரிசையில் அடுத்து உருவாகியுள்ள ஆந்தாலஜி படம்தான் ‘குட்டி லவ் ஸ்டோரி’.

ITS ALL ABOUT LOVE

காதலை மையமாக வைத்து நான்கு இயக்குநர்கள் உருவாக்கியுள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த ஆந்தாலஜியைத் தயாரித்ததுள்ளது.

இந்த நான்கு கதைகளை வெங்கட் பிரபு, கெளதம் மேனன், விஜய் மற்றும் நலன் குமாரசாமி இயக்கியுள்ளனர்.

இவற்றில் கவுதம் மேனன் & அமலாபால் ஒரு படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி & அருவி அதிதி பாலன் வேறொரு படத்திலும் கதிர் & மேகா ஆகாஷ் அடுத்த படத்திலும் வருண் & சாக்‌ஷி அகர்வால் ஒரு படத்திலும் நடித்துள்ளனர்.

முதலில் ஓடிடி ரிலீசுக்குத் திட்டமிட்டு உருவானது இந்த படத்தை தற்போது நேரடியாகத் தியேட்டர்களில் வெளியிடுகின்றனர் வேல்ஸ் ஐசரி கணேஷ்.

ஓடிடி நிறுவனங்களும் முதலில் தியேட்டர் ரிலீஸை தான் விரும்புகிறதாம். தியேட்டர்களில் படம் பிரபலமானதும், ஓடிடியில் வெளியானால் இன்னும் பெரிய ரீச் நன்றாக இருக்கும் என ஓடிடி தளங்கள் விரும்புகிறதாம்.

Kutty Story in theatres on Feb 12th

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து..; தமிழக முதல்வர் அதிரடி

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து..; தமிழக முதல்வர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019 ஜனவரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் அரசு ஊழியர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டது.

இதன் பின்னர் அரசு துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் கோரிக்கை வைத்து இருந்தன.

இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

TN CM important desicion on government employees

பிப்ரவரி 12 முதல் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘இது விபத்து பகுதி’

பிப்ரவரி 12 முதல் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘இது விபத்து பகுதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேகா மூவீஸ் புரொடக்ஷன்ஸின் மூன்றாவது தயாரிப்பாக வெளிவரவிருக்கும் ஹாரர் திரில்லர் “இது விபத்து பகுதி” படம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் மிரட்ட வருகிறது.

எம். சக்ரவர்த்தி தயாரிப்பில் ரேகா மூவிஸ் வழங்கும் “இது விபத்து” பகுதி ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள். வெளியாகியுள்ளது.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு ஆகியவற்றை விஜய் திருமூலம் கையாண்டுள்ளார்.

கை தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் நடித்துள்ளனர். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

எடிட்டிங் பணிகளை ஆண்டோ ராயன், ஸ்டன்ட் மின்னல் முருகன், நடனம் ஜோ மதி மற்றும் கலை சுந்தர் ராஜன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இப்படத்தின் போஸ்டர்கள் சஸ்பென்ஸ், ஹாரர் திரில்லர் படமாக இருப்பதால் படம் விறுவிறுப்பான கதைகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 12 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.

Ithu Vibathu Paguthi from feb 12 in theatres

சிம்பு பர்த் டே & ‘மாநாடு’ அப்டேட்..; சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ ட்ரீட்

சிம்பு பர்த் டே & ‘மாநாடு’ அப்டேட்..; சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ‘மாஸ்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanaadu (2)‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து விட்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதில் சிம்பு உடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணி புரிய, இசையமைப்பாளராக யுவன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் 2.34 மணிக்கு ‘மாநாடு’ பட டீசரை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தன் பிறந்த நாளுக்கு தான் ஊரில் இருக்க மாட்டேன். ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என சிம்பு அறிக்கை வெளியிட்டார்.

இதனால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த டீசர் அறிவிப்பு உற்சாகத்தை அளிக்கும் என நம்பலாம்.

Str’s Maanaadu teaser date and time is here

எல்ஐசி பங்குகள் விற்பனை.. தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள்.. விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி கடன்..; பட்ஜெட் 2021-22 ஒரு பார்வை

எல்ஐசி பங்குகள் விற்பனை.. தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள்.. விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி கடன்..; பட்ஜெட் 2021-22 ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Budget 2021 - 20222021-22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இதோ..:

ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்கள் 2021-22-ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு விடும்.

எல்ஐசி காப்பீடு நிறுவன பங்குகளை விற்பனை செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 2020-25-ஆம் ஆண்டுவரை ரூ.111 லட்சம் கோடி தேவைப்படுகிறது.

இந்த நிதியை உருவாக்குவதற்காக ரூ.20,000 கோடியில் மேம்பாட்டு நிதிக் கழகம் (டிஎப்ஐ) உருவாக்கப்படும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு.

பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரி 10% இருந்து 15 % வீதமாக அதிகரிப்பு.

75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு.

நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம்.

கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைப்பு.

வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும் என தகவல்.

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் மீது வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிப்பு.

அதன்படி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 கூடுதல் வரி விதிப்பு என அறிவிக்கப்பட்டது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. ஆனால் இந்த புதிய வரியால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

இத்துடன் சில பொருட்கள் மீதும் வேளாண் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆல்கஹால் 100%, தங்கம் மற்று வெள்ளி 2.5% , பாமாயில் 17.5% , சூரியகாந்தி எண்ணெய் 35%, ஆப்பிள் மற்றும் பட்டாணி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை – கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.

Most important things you need to know about budget 2021-2022

More Articles
Follows