தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸை தடுக்க விடப்பட்டுள்ள பொது முடக்கத்தால் 2 மாதங்களாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
தற்போது சில தளர்வுகளுடன் கடைகள் & வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு ஒரு சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிப்பது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர் பன்னீர்செல்வம், இயக்குனர் ஆர் வி உதயகுமார் ஆர் கே செல்வமணி ஆகியோரும் உடனிருந்தனர்.
மேலும் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கோரி கோரிக்கை விடுத்தனர்.