கொரோனா ஊரடங்கால் 10 மாதங்களாக மூடப்பட்ட…
...Read More
விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.
இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ படத்தில் விஜய் பேராசிரியராக நடித்துள்ளார். அத்துடன் இறுதி காட்சியில் இவர் போலீசாக வருகிறார் எனவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.
இதில் மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.
மாளவிகா மோகனனுக்கு நடிகை ரவீனா ரவி என்பவர் டப்பிங் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் விதார்த் நடித்த ’ஒரு கிடாயின் கருணை கதை’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
ரவீனா ரவியின் தாயார் ஸ்ரீஜாவும் ஒரு டப்பிங் கலைஞர் தான். இவரும் சில படங்களில் நடித்துள்ளார்.