தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
ரஜினிகாந்த் பொதுவாகவே தன்னுடைய படங்களை முடித்துவிட்டு அந்த படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இமயமலைக்கு பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த கடந்த நான்கு வருடங்களாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்து இருந்தார்.
தற்போது 4 வருடங்களுக்குப் பிறகு இமயமலை சென்று அங்கு தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை செய்து வருகிறார் ரஜினிகாந்த்.
இப்பயணத்தின்போது, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார்.
ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று,துறவிகளை சந்தித்து உரையாடினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. மேலும் பலரும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதுபோல ரஜினியும் சில துறவிகள்ளிடம் ஆசிகள் பெற்றார்.
பின்னர் உத்தரகாண்ட் வியாசர் குகைக்கு சென்ளார். பிறகு துவாரஹட்டில் உள்ள மகாவதார் பாபாஜி குகைக்கு சென்று
குகையில் தியானம் செய்தார் ரஜினி.
இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தார் ரஜினி.
இதன் பின்னர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம துறவிகளை சந்தித்து ஆசிரமத்துக்கு நன்கொடையும் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
இன்று ஆகஸ்ட் 18 லக்னோ சென்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேச உள்ளார் ரஜினி என கூறப்படுகிறது.
Rajinis spiritual tour at Himalayas after Jailer release