தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது…
“ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் அக்ஷய்குமார் கேரக்டரை நான் செய்திருப்பேன். அவர்தான் படத்தின் ஹீரோ.
இப்படத்தை உற்சாகமாக செய்தேன். இதன் ஸ்டோரி மிகவும் கவர்ந்துவிட்டது.
2.ஓ படம் ஹாலிவுட் படத்திற்கு நிகரானது. இந்திய சினிமாவே இப்படத்திற்காக பெருமைப்படும்.
ஷங்கருடன் பணிபுரிவது ரொம்ப கஷ்டம். அவர் மிகச்சிறந்த திறமைசாலி.
இவ்விழாவுக்கு வந்துள்ள சல்மான் கான் சம்மதித்தால் நாளைக்கே அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கத் தயார்.
என் படங்களின் ரிலீஸை கடவுளும் ரசிகர்களும் ஒரு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.” என்று பேசினார்.