தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.
ஓரிரு தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் டெல்லி சென்றார். அங்கு தெலுங்கு அரசியல் பிரமுகரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.
தற்போது சென்னை திரும்பி உள்ள கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.
ராஜ் பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து சுமார் 30 நிமிடங்கள் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
இதை தொடந்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஆளுநருடன் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.
தமிழர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை ஆளுநரை மிகவும் கவர்ந்துள்ளது என்றார்.
பால், தயிர், பென்சில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளதே என்பது குறித்த கேள்விக்கு ரஜினி பதிலளிக்கவில்லை.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15ம் தேதி அல்லது 25ம் தேதி தொடங்கும் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Rajinikanth meets governor R.N.Ravi