தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைக்க வந்தார்.
சிலைத் திறப்புக்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தனர்.
அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினிகாந்த் அறிவித்த பின், அவர் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இது என்பதால் அவரை வரவேற்கும் வகையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர உள்ளதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கூறியுள்ளார்.
ஆரம்ப நிலையிலேயே இப்படி பேனர்கள் வைப்பவர்கள் எப்படி அரசியலில் நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை காவல்துறையும் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது சரியல்ல.
அரசியலில் மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறி வரும் நடிகர்கள் வழக்கமான அரசியல்வாதிகள் போல் நடந்துகொள்வது வேதனை அளிப்பதாகவும் டிராஃபிக் ராமசாமி கூறினார்.
இது தொடர்பான விழாவில் ரஜினி பேசும்போது… இனி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது அப்படி நடந்துக் கொள்ள கூடாது என்றார்.
மேலும் இதற்காக மக்களிடம் தான் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini fans banners disturb issue Traffic Ramasamy raises question