சினிமாவை கலாய்த்த தமிழ்படம்2-க்கு பாராட்டு; அரசியலை கலாய்த்த “டிராபிக் ராமசாமி*க்கு மிரட்டல்

சினிமாவை கலாய்த்த தமிழ்படம்2-க்கு பாராட்டு; அரசியலை கலாய்த்த “டிராபிக் ராமசாமி*க்கு மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Komaali 2nd Single Track from Traffic Ramasamy made an issueரஜினி முதல் விஜய், அஜித் வரை எல்லா படங்களையும் கலாய்த்து தமிழ்ப்படம் 2.0 படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

அமுதன் இயக்கியுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார்.

அதில் சினிமாவை மட்டுமே கலாய்த்து இருந்தனர். இதற்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்ல் கோமாளி என்ற பாடலில் இந்திய நாட்டில் தற்போது நடந்து வருகின்ற அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் கலாய்த்துள்ளனர்.

எனவே அந்த படக்குழுவினர் மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளது.

இந்த பாடல் குறித்து விவரம் வருமாறு…

மத்திய மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் டிராபிக் ராமசாமியின் கோமாளி பாடல் நேற்று வெளியானது. உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் நக்கலடிக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

பெரியார் பற்றி பதிவிட்டு பின் அட்மின் செய்த தவறு என்று சொன்ன எச்.ராஜா முதல் ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாச்சாரம் வரை பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து போட்டு தாக்கியிருக்கிறார்.

பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு தரப்பில் இருந்து படக்குழுவினர்க்கு மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Komaali 2nd Single Track from Traffic Ramasamy made an issue

ஆன்மிக அரசியல் ஒரு பிசினஸ்; ரஜினி மீது சத்யராஜ் மறைமுக தாக்கு

ஆன்மிக அரசியல் ஒரு பிசினஸ்; ரஜினி மீது சத்யராஜ் மறைமுக தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Aanmeega Arasiyal is like business says Actor Sathyarajகலைஞர் கருணாநிதி அவர்களின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் ரஜினியின் ஆன்மிக அரசியலை கிண்டலடித்து பேசினார்.

அவர் பேசியதாவது….

நாம் எங்கே ஹோட்டல் வைக்க திட்டமிட்டுவோம்? மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சைவ ஹோட்டல் அல்லது அசைவ ஹோட்டல் வைக்க திட்டமிட்டுவோம்.

அதுபோல் வெற்றிடம் இருப்பதாக கூறி அரசியலுக்கு வருகிறார் ஒருவர் (ரஜினி). அந்த ஆன்மிக அரசியல் ஒரு பிசினஸ் அவ்வளவுதான்.

சேவை மனப்பான்மையுடன் அரசியலுக்கு வரவேண்டும்” என சத்யராஜ் பேசினார்.

Rajinis Aanmeega Arasiyal is like business says Actor Sathyaraj

என் 43 வருட சினிமா கேரியரில் காலாவுக்கு புரோமோ தேவையில்லை… -ரஜினி

என் 43 வருட சினிமா கேரியரில் காலாவுக்கு புரோமோ தேவையில்லை… -ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont want promote my movies since i am at 43 years in Cinema says Rajiniநாளை மறுநாள் ஜீன் 7ல் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா ரிலீஸ் ஆகவுள்ளது.

பெரும்பாலும் ரஜினி படங்கள் வெளியாகும்போது அவர் அரசியல் குறித்து ஏதாவது பேசுவார். பின்பு ஆஃப் ஆகிவிடுவார். அடுத்த படம் வரும்போது எதாவது சர்ச்சையாக பேசி தன் படத்திற்கு புரோமோ செய்வார் என்ற குற்றச்சாட்டு அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் காலா பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பிய போது ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களை ரஜினி சந்திக்க சென்றது காலா படத்தின் புரோமோசனுக்கா..? என்றும் சிலர் கேள்விகளை முன் வைத்தனர்.

அதற்கு சிரித்துக் கொண்டே ரஜினி பேசியதாவது…

கடவுள் அருளால், மக்கள் அன்பால் என் ரசிகர்கள் ஆதரவால் இந்த வயசுல என் 43 வருட சினிமா கேரியர்ல என் படங்களுக்கு புரோமோசன் செய்ய வேண்டிய தேவையில்லை.

காவிரி நீர் தொடர்பாக கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது நல்லதுதான். பேச்சுவார்த்தையால் எதையும் முடிவுக்கு கொண்டு வரலாம். நிறைய சான்றோர்கள் அதை தான் செய்துள்ளார்கள்.” என்றார்.

I dont want to promote my movies since i am 43 years in Cinema says Rajini

காலாவுக்கு எதிர்ப்பு கம்மிதான்; இன்னும் எதிர்பார்தேன்.. ரஜினி ஓபன் டாக்

காலாவுக்கு எதிர்ப்பு கம்மிதான்; இன்னும் எதிர்பார்தேன்.. ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I expected more opposition for Kaala movie Rajinikanth open talkரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கி தனுஷ் தயாரித்துள்ள காலா திரைப்படம் நாளை மறுநாள் ஜீன் 7ல் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் எதிர்ப்புகள் வந்தாலும் உலகமெங்கும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கு பதிப்புக்கான காலா பிரஸ்மீட்டில் கலந்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

இதனை முடித்துவிட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது….

காலா படத்திற்கு கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

கர்நாடக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். மேலும் நான் மதிக்கும் தேவகௌடா அவர்கள் இது குறித்து பேசுவார் என நம்புகிறேன்.

இந்த எதிர்ப்பு கம்மிதான். நான் இன்னும் அதிகமா எதிர்பார்த்தேன்.

படம் நன்றாக இருந்தால் மக்கள் பார்க்க போகிறார்கள். இல்லையென்றால் அவ்வளவுதான்.

சினிமா வேற அரசியல் வேற. இரண்டையும் எப்போதும் இணைத்து பார்க்கக்கூடாது” என ரஜினி ஓபனாக பேசினார்.

I expected more opposition for Kaala movie Rajinikanth open talk

அர்ஜூன்-விஜய் ஆண்டனி இணையும் கொலைகாரன் பட பர்ஸ்ட் லுக்

அர்ஜூன்-விஜய் ஆண்டனி இணையும் கொலைகாரன் பட பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kolaigaranகாளி மற்றும் திமிரு புடிச்சவன் படங்களை தொடர்ந்து கொலைக்காரன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார் என்பதை சில தினங்களுக்கு முன் நம் தளத்தில் படித்தோம்.

இப்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதில் முதன்முறையாக அர்ஜூன் உடன் இணைந்து நடிக்கிறார்.

இப்படத்தை விஜய் ஆண்டனியின் நண்பர் ஆன்ட்ரூ லுயிஸ் இயக்குகிறார்.

தியா மூவிஸ் சார்பாக பிரதீப் என்பவர் தயாரிக்க, நாளை முதல் இப்பட சூட்டிங்கை துவங்கவுள்ளனர்.

Arjun and Vijay Antony teams up for Kolaigaran first look launch

ரஜினியின் பிம்பத்தை சிதைக்க முயல்கிறார் கமல் – தமிழருவி மணியன்

ரஜினியின் பிம்பத்தை சிதைக்க முயல்கிறார் கமல் – தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilaruvi Manian reaction towards Kamal speech about Rajiniதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் அண்மையில் பேசியிருந்தார்.

மேலும் போராட்டங்கள் அடிக்கடி நடைபெற்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என கூறியிருந்தார்.

இதுகுறித்து கமல் இன்று ஒரு பேட்டியில் பேசும்போது… ரஜினி பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. போராட்டங்கள் தேவை. என்பதே என் கருத்து என பேசினார்.

இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் கூறியதாவது…

மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில் கமலஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.

ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது.

ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது.

சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம்.

இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன என்றிருந்த நிலையில் ஒத்துழையாமை, சாத்விக சட்ட மறுப்பு, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, தேசியக் கல்வி போன்ற தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் காந்தி மக்கள் கருத்தை மாற்ற முயன்றார்.

அடங்கிக் கிடப்பதுதான் ஆண்டவன் எழுதி வைத்த விதி என்ற நம்பிக்கையில் ஒடுங்கிக் கிடந்த அடித்தட்டு மக்களிடம் தன் உரிமை சார்ந்த சொந்தக் கருத்துகளின் மூலம்தான் புரட்சிக் கனலை அண்ணல் அம்பேத்கார் மூட்டினார்.

தன்மான உணர்வின்றித் தலை தாழ்ந்து கிடந்த தமிழரிடையே பகுத்தறிவு சார்ந்த தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் “அறிவும் மானமுமே மனிதற்கு அழகு” என்று பெரியார் சமூக மாற்றத்திற்கு வித்திட்டார்.

ரஜினிகாந்த் காந்தியும் இல்லை; அம்பேத்கரும் இல்லை; பெரியாரும் இல்லை. ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினி தன் சொந்தக் கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவரில்லை.

காந்தியின் சீடர் என்று அடிக்கடி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன் பெரிய தொழில்கள் காந்தியின் கனவு என்கிறார்.

கிராமக் கைத்தொழில்களும், சிறு குறு தொழில்களும், வேளாண்மையும் பல்கிப் பெருகுவதன் மூலமே அனைத்து மக்களும் வறுமையற்ற வாழ்வை அடைய முடியும் என்று இடையறாமல் வலியுறுத்திய காந்தி பெருந்தொழில்களுக்கு எதிராகவே இறுதிவரை போராடினார்.

கமலஹாசன் இனியாவது காந்தியப் பொருளாதாரம் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

சமூக வலைத்தளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது.

-தமிழருவி மணியன்

Kamal trying to exploit anti Rajini sentiment says Tamilaruvi Manian

Kamal trying to exploit anti Rajini sentiment says Tamilaruvi Manian

More Articles
Follows