‘ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை அவர் கொடுப்பார்’ – சின்னி ஜெயந்த்

‘ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை அவர் கொடுப்பார்’ – சின்னி ஜெயந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chinni jayanthசாட்டை படத்தை தொடர்ந்து அன்பழகன் இயக்கியுள்ள படம் ரூபாய்.

இமான் இசையமைக்க, இயக்குனர் பிரபுசாலமன் தயாரித்துள்ளார்.

இதில் கயல் ஜோடியான சந்திரன், ஆனந்தி இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் சின்னி ஜெய்ந்த், மாரிமுத்து ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சின்னி ஜெயந்த கலந்து கொண்டு பேசியதாவது….

“ரூபாய் படம் அருமையாக வந்துள்ளது. தயாரிப்பாளருக்கு நன்றி.

மிகவும் யதார்த்தமான படங்களை கொடுப்பவர் இயக்குனர் பிரபு சாலமன்.

கை கொடுக்கும் கை, முள்ளும் மலரும் போன்ற படங்களில் ரஜினி நடிக்க வேண்டும். கபாலி அப்படியொரு படம்தான்.

அதுபோல் இயக்குனர் பிரபுசாலமன் ரஜினியின் இன்னொரு பரிமாணத்தை காட்ட வேண்டும். ரஜினியை அவர் இயக்கவேண்டும்” என்று பேசினார்.

இறுதியாக ரஜினியை போல் மிமிக்ரி செய்து காட்டினார்.

டைரக்டர் விலகல்; தனுஷின் ஹாலிவுட் கனவு நிறைவேறுமா.?

டைரக்டர் விலகல்; தனுஷின் ஹாலிவுட் கனவு நிறைவேறுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushகோலிவுட்டில் வெற்றி வாகை சூடிய தனுஷ், பாலிவுட்லும் வெற்றிக் கொடி நாட்டினார்.

அதன்பிறகு ஹாலிவுட்டில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி பல மாதங்களுக்கு முன்பே வந்தது.

இது பிரெஞ்ச் எழுத்தாளர் ரோமைன் பியுர்டேலஸ் எழுதிய நாவலை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள இக்கதைக்கு ‘தி எக்டார்டினரி ஜர்னி ஆப் த ஃபகிர்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் மர்ஜானே சட்ரபி இயக்கவிருந்தார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் சூட்டிங்கில் தனுஷ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹாலிவுட் நடிகைகள் உமா துர்மன் மற்றும் அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இதில் தற்போது எதிர்பாராத விதமாக டைரக்டர் மர்ஜானே சட்ரபி திடீரென விலகியுள்ளார்.

வேறு ஒருவர் இயக்குவார் என்றாலும், அது யார்? என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.

இதனிடையில், வட சென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, சௌந்தர்யா ரஜினி இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடிக்கவுள்ளதால், ஹாலிவுட் படம் எப்போது என்பது தெரியவில்லை.

தீபாவளி ட்ரீட்டை இரட்டிப்பாக தரும் விஜய்

தீபாவளி ட்ரீட்டை இரட்டிப்பாக தரும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bairavaa stillsஇந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக தெறி படத்தை கொடுத்தார் விஜய்.

எனவே தீபாவளிக்கும் விஜய்யிடம் இருந்து பைரவா விருந்தை எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

ஆனால் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இவ்வருட தீபாவளிக்கு பைரவா டீசரை வெளியிட உள்ளார்.

ஆனால் ஒரு நாள் முன்பாக அதாவது நாளை 28ஆம் தேதி தொடங்கும்போது, நள்ளிரவு 12.01 மணிக்கு பைரவா டீசர் ரிலீஸ் ஆகிறது.

கூடவே இந்த டீசரை தீபாவளி முதல் திரையரங்குகளில் வெளியிடவும் பைரவா படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

 

bairavaa teaser

‘இனி படமே கிடையாது…’ பிரபுசாலமனின் முடிவுக்கு என்ன காரணம்.?

‘இனி படமே கிடையாது…’ பிரபுசாலமனின் முடிவுக்கு என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu solomonகொக்கி, மைனா, கும்கி, கயல், தொடரி உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன்.

இவர் காட் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் ரூபாய். இப்படத்தை அன்பழகன் இயக்கியுள்ளார்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபு சாலமன் பேசும்போது…

ஒரு நல்ல இயக்குனர் அன்பழகன். மிகவும் அமைதியானர்வர்.

அவர் சொன்ன ஒன்லைன் ஸ்டோரி நிச்சயம் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என இப்படத்தை எடுத்தேன்.

ஆனால் படத்தை தயாரித்து வெளியிடுவதற்குள் பெரும் பாடுபடுகிறேன்.

படம் நல்ல விலைக்கு விற்பனை ஆகவில்லை. காஸ்மோ வில்லேஜ் சிவா பின்னர் பேரம் பேசாமல் வாங்கி கொண்டார் அவருக்கு நன்றி.

ஆனால் இனி படங்களை தயாரிக்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளேன்” என்றார்.

‘தனி ஒருவன்’ அரவிந்த் சாமி பாணியில் மிரட்டும் ஷாம்

‘தனி ஒருவன்’ அரவிந்த் சாமி பாணியில் மிரட்டும் ஷாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shaam stillsதிருமணமானவர்களுக்கு முதல் தீபாவளி எப்படி தலை தீபாவளியோ, அதுபோல் தீபாவளி அன்று தங்கள் படங்கள் வெளியானால் அதுதான் நடிகர்களுக்கு தலை தீபாவளி.

தற்போது முதன்முறையாக ஷாம், இந்த தலை தீபாவளியை கொண்டாடும் மகிழ்ச்சியில் உள்ளார்.

அவர் கன்னடத்தில் நடித்துள்ள ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ நாளை தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆகிறது.

இப்படம் குறித்து ஷாம் கூறியதாவது….

“கன்னடத்தில் இது எனக்கு மூன்றாவது படம். இதை இயக்கியிருப்பவர் மகேஷ் ராவ். ஒளிப்பதிவு ஆண்ட்ரூ. கே. மஞ்சு என்பர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

நான் இதுவரை நடித்ததில் மோஸ்ட் பவர்புல் ரோல் இந்த படத்தில் அமைந்துள்ளது.

இதில் நான் கேங்ஸ்டராக வருகிறேன்.. தேவ் எனது கேரக்டர் பெயர்.

எனக்கு ஒரு தனியாக தீம் சாங் உண்டு. நான் வரும் போதெல்லாம் அது ஒலிக்கும்.

‘தனி ஒருவன்’ அரவிந்தசாமி மாதிரி இந்தப் படம் வந்ததும் நான் பேசப்படுவேன்.

இதுவரை நான் சேர்ந்து நடித்தவர்களில் யஷ் சிறந்த கோ ஆர்ட்டிஸ்ட் என்பேன்.

பொதுவாக நடிப்பவர்கள் தன் பாத்திரம், தோற்றம், ஸ்டைல்,உடைகள், வசனங்கள், நடிப்பு போன்றவை தங்களுக்கு மட்டும் நன்றாக சிறப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்; நினைப்பார்கள்.

ஆனால் யஷ் மாறுபட்டவர். அவருக்கு படத்தில் எப்படி முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே போல எனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

தன் நாயகன் பாத்திரம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் எதிராளியான வில்லன் பாத்திரமும் நன்றாக வர வேண்டும் என விரும்பினார்.

உங்களிடமுள்ள பெஸ்ட்டைக் கொண்டு வாருங்கள் என்று என்னை நன்றாக ஊக்கப்படுத்தினார். நடிப்பதற்கு எனக்கான இடத்தை விரிவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்தார்.

actor shaam stills

அது மட்டுமல்ல என் உடைகளை வடிவமைத்ததே அவர் தான். என் சூட் இப்படி இருக்க வேண்டும்., ஜாக்கெட் இப்படி ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக் கொடுத்தார்.

எனக்கு வேறு மொழிகளில் வந்த “கிக்’, ‘ரேஸ் குர்ரம்’ போன்ற படங்கள் எல்லாமே என் , ‘6’ படம் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கின்றன. இந்தப்படமும் அப்படித்தான் வந்தது.

என்ற ஷாம் தமிழில் ‘காவியன்’ என்கிற படத்தில் நடித்து வருவதாகவும் தெலுங்கில் சுரேந்தர் ரெட்டியின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

விடைபெறும் முன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் கூறினார்.

வெங்கட் பிரபு டீம் அடித்த மூன்று செஞ்சுரி

வெங்கட் பிரபு டீம் அடித்த மூன்று செஞ்சுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

channai 28 II inningsவெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு டீசர்களும், ஒரு டிரைலரும் பத்து லட்ச பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல ஆண்டு காலமாக விடை தெரியாமல் வலம் வந்து கொண்டிருந்த ஒரு கேள்வி, “கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா..” தற்போது அந்த கேள்விக்கு தன்னுடைய டீசர் மூலம் விடை அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இதுகுறித்து வெங்கட் பிரவு கூறியதாவது….

“எங்கள் சென்னை 28 – II படத்தின் இரண்டு டீசர்கள் மற்றும் ஒரு டிரைலர் மூலம் நாங்கள் தொடர்ந்து மூன்று சதம் அடித்திருப்பது, எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.

எங்கள் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்….” என்று உற்சாகமாக தெரிவித்தார் இந்த டீம் கேப்டன்.

More Articles
Follows