தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த உதிரிப்பூக்கள், தங்கப்பதக்கம், ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன்.
அண்மையில் வெளியான பேட்ட, தெறி, நிமிர் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் இவர் காலமானார். அவருக்கு வயது 79. இவருக்கு ஒரு மகன். 2 மகள்கள் உள்ளனர்.
மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
நீண்ட காலமாக மகேந்திரனுடன் நட்பு உண்டு. படங்கள் நாங்கள் குறைவாகச் செய்திருந்தாலும், நட்பு வலுவானது. பக்கத்து ஊர்க்காரர். திறமையான மனிதர் என நான் வியந்தவர்.
‘தங்கப்பதக்கம்’ காலத்திலிருந்தே அவரைத் தெரியும். முதலில் ‘முள்ளும் மலரும்’ படத்தில்தான் நான் நடிப்பதாக இருந்தது.
இயக்குனர் பாலு மகேந்திராவையும் இவரையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.
இரண்டு பேர் கையையும் சேர்த்துவைத்து, ‘வெற்றிப் படங்கள் எடுங்கள்’ என்று சொன்னேன். அவர்கள் செய்த படத்துக்கு கிட்டத்தட்ட புரொடக்ஷன் மேனேஜர் மாதிரி வேலை செய்துள்ளேன்.
அவரைப் பார்த்து, சினிமா எடுக்க வேண்டும் என்று ஒரு இளைஞர் கூட்டமே வந்தது என்று சொன்னால் மிகையாகாது.
அவரது முடிவு, உச்சத்தைத் தொட்ட பிறகுதான் ஏற்பட்டு இருக்கிறது என்பதில் சந்தோஷம். இவருடைய நினைவுகள் தமிழ் சினிமாவில் என்றும் தாங்கி நிற்கும்.
இவ்வாறு பேசினார் கமல்ஹாசன்.
Kamal paid homage to Mahendran and shares his friendship with him