தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’
ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டடித்துள்ளது.
கடந்த மே மாதம் படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படம் ரிலீஸ் தள்ளி போனது.
150 நாட்களாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் படத்தை ஆன்லைனில் வெளியிடுவதாக அறிவித்தார் சூர்யா.
ஏற்கெனவே இவரின் மனைவி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்த போதே தியேட்டர்கள் உரிமையாளர் எதிர்ப்பை வாங்கி கட்டிக் கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்பட உள்ளது.
இந்த நிலையில் சூர்யாவின் இந்த அதிரடி முடிவு குறித்து பிரபல சேனலுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்துள்ள பேட்டியில்….
‘சூரரைப் போற்று’ படம் பிரம்மாண்டமான படம். அது ஓடிடி.க்கான படமே இல்லை. தியேட்டரில் வெளியிட வேண்டும்.
ஆனால் தியேட்டர்கள் திறப்பது எப்போது என யாருக்கும் தெருயவில்லை. துபாய், மலேசியா நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டும் 5% ஆடியன்ஸ் மட்டுமே வருகின்றனர்.
இதனால் எவருக்கும் லாபமில்லை.
கொரோனா தடுப்பூசி வரும்வரை மக்களிடம் பீதி இருக்கத்தான் செய்யும்.
நிச்சயமாக சூர்யாவின் முடிவு அவருக்கு நஷ்டம் தான். தியேட்டரில் ரிலீஸ் செய்தால் பெரிய லாபத்தை அடைவார்.”
இவ்வாறு தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.