தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கி தயாரித்திருந்த படம் ‘பொன்னியின் செல்வன்’.
70 ஆண்டுகளுக்கு முன் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகம் என்றும் நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.
லைக்கா தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்திருந்தனர்.
எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
நேற்று படம் வெளியானது முதலே படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
அதன் படி ரூபாய் 80 கோடியை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை என்று கூறலாம். இனி வரும் நாட்களில் மேலும் ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை விடுமுறை நாட்களில் இதன் வசூல் எகிறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த படத்திற்கு PS1 ப்ரீ-புக்கிங்கில் செயலிகளே கிராஷ் ஆகும் அளவிற்கு வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Ponniyan Selvan collections in 100 crore