The Cholas Are Coming: Snack Bar & Rest Room வசதியுடன் ‘பொன்னியின் செல்வன்’ Special Bus

The Cholas Are Coming: Snack Bar & Rest Room வசதியுடன் ‘பொன்னியின் செல்வன்’ Special Bus

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்திற்கு தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்து உலக மக்களும் பெரும் ஆதரவளித்து வருகின்றனர்.

படக்குழுவை அனைத்து தரப்பும் மக்களும் பாராட்டி வரும் வேளையில் பொன்னியின் செல்வன் படம் தொடர்பான ஒரு சிறப்பு பேருந்தை அறிமுகம் செய்துள்ளது பிவிஆர்.

தமிழ் சினிமாவின் பெருமையான, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை கொண்டாட, அது போன்ற பிரம்மாண்டமான சில விஷயங்களும் நமக்கு தேவைதானே?

*நாள் 1*: இதனை ஒட்டி, வசந்த் & கோ’ஸ் சென்னை பிரிவின் நிர்வாக இயக்குநர் முதல் நாளில் பஸ் டூர் ஒன்றை தொடங்கி வைக்கிறார். அதே போல, மாலை சென்னை நகரத்துக்குள் மற்றொரு ஃபன் டூர் ஒன்றை லலிதா ஜுவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

*நாள் 2-5:* இரண்டாம் நாளில், 150+ வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராண்ட் பிரதிநிதிகளுடன் உற்சாகமான நடைப்பயணம் இருக்கும்.

மேலும், இந்த பஸ் டூர் சத்யம் சினிமாவில் தொடங்கி எங்கெல்லாம் பார்வையாளர்கள் ‘பொன்னியின் செல்வன்1’ படத்தை பார்த்து கொண்டாடி அன்பை தருகிறார்களோ அங்கெல்லாம் செல்ல இருக்கிறது.

படத்தில் உள்ள நட்சத்திரங்களின் படங்களும் இந்தப் பேருந்தில் மக்களின் கவனத்தை குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாது வசதியான plush இருக்கைகள், பேருந்துக்குள்ளே கழிப்பறை, ஸ்நாக் பார் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்.

PVR-ல் விளம்பரம் செய்யுங்கள்!!!

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது தொடர்பான அனைத்து சுவாரஸ்யமான விஷயங்களையும் பார்க்க தவறாதீர்கள்!

தளபதி விஜய் – கௌதம் மேனன் கூட்டணி கடைசியில் நடக்குமா?

தளபதி விஜய் – கௌதம் மேனன் கூட்டணி கடைசியில் நடக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் த்ரிஷா நடிக்கும் ‘தளபதி 67’ இல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னை அணுகியதாக வெந்து தணிந்தது காடு பட வெளியீட்டிற்கு முன் ஒரு நேர்காணலில் கௌதம் வாசுதேவ் மேனன் வெளிப்படுத்தியிருந்தார்.

சமீபத்தில், VTK வெளியீட்டிற்குப் பிறகு சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் கௌதம் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்தினார். ஆதாரங்களின்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி 67 படத்திற்காக அவர் 45 நாட்களுக்கு மேல் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமா?

ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் ’ படத்தின் விளம்பரப் பணியில் ஈடுபட்டிருந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், விமான நிலையத்தில் அதிக அளவு உடையில் தோன்றியதால் கர்ப்பம் பற்றிய வதந்திகள் பரவின.

இருப்பினும், இந்த ஊகங்கள் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

பிரபல தமிழ் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955 நாவலை அடிப்படையாகக் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தில் ராணி நந்தினியின் பாத்திரத்தை அவர் சித்தரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டு ஆட்சியை புட்டு புட்டு வைத்த ‘தேனிசை தென்றல்’ தேவா

5 ஆண்டு ஆட்சியை புட்டு புட்டு வைத்த ‘தேனிசை தென்றல்’ தேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கானா என்றாலே தேவாதான்.. சலோமியா, சலாமு குலாம்னு கலக்குனவரு… கடைசியா ஜித்து ஜில்லாடினு தெறியா வந்தாரு… இப்ப வேற மாறி.. வெறியா மறுபடியும் பாடி இருக்காரு… படம் பேரு ‘டைனோசர்ஸ்’…

தமிழ் பத்தியும்.. தமிழகத்தின் கடந்த 5 வருட நிலைமையையும்.. பாட்டு புட்டு, புட்டு வெக்குது… பாட்டு படத்துமேல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது ஒரு மில்லியன் (பத்து லட்சம்) பார்வைகளை இந்த பாடல் கடந்துள்ளது.

இப்படத்தை புதுமுக இயக்குநர் எம் ஆர் மாதவன் இயக்குகிறார். இவர் இயக்குநர் சுராஜின் உதவி இயக்குநர்.

மேலும் பல இயக்குநர்களிடம் கதை விவாதங்களில், திரைக்கதை அமைப்பில் கலந்து திரை அனுபவம் பெற்றவர். அவர் இயக்கியுள்ள படம்தான் இந்த ‘டைனோசர்ஸ்’. இது ஒரு கேங்ஸ்டர் கதை.

இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள்தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் ‘டைனோசர்ஸ்’ என்று ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் என்கிறார்கள்.

படத்தின் கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவை.
இந்தப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் 120 பேர் வசனங்கள் பேசி நடித்து இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரையும் புதுமையான சித்தரிப்பின் மூலம் மனதில் நிற்கும் படியான பாத்திரங்களாக அமைத்துள்ளார் இயக்குநர் M R மாதவன்.

இப்படத்தை கேலக்ஸி பிக்சர்ஸ் (Galaxy Pictures) சீனிவாஸ் சம்பந்தம் தயாரிக்கிறார்.

Maasa Marina sung by Deva from Dinosaurs crosses 1M views

#MassaMarina from #Dinosaurs hits 1 Million + views sung by ever #Deva Sir

▶️ https://youtu.be/NQYl6B46nlI

@MRMADHAVAN33 @GalaxySrinivas @jones_anand @bobosasii_music @SenthamizhanAM @kalaivananoffl @stunnerSAM2 @sharanyalouis @tipsmusicsouth @tipsofficial @onlynikil

@avishekactor @RishiRithvik10 @ActorSrini @Gokul_Ram_Actor @StillsManeksha1

‘PS1’ படத்திற்கு பெரியோர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல விக்ரம் வேண்டுகோள்

‘PS1’ படத்திற்கு பெரியோர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல விக்ரம் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இன்று பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோஃபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன்

இந்த விழாவில் விக்ரம் பேசும்போது…

“இந்த படத்திற்காக இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு சென்றோம். சோழர் பெருமையை எல்லா மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்து கூறியுள்ளோம்.

‘பொன்னியின் செல்வன்’ என்பது மட்டுமே அவர்களுக்கு புரியாத பெயராக இருந்தது. இப்போது பொன்னியின் செல்வன் என்ற பெயர் அவர்களுக்கு புரிந்து விட்டது.

இதுவரை இல்லாத அளவிற்கு படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக இந்த படத்திற்கு பெரியோர்களின் ஆதரவும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. வீட்டில் உள்ள வயதானவர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

எனவே அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்வது அவர்களின் பிள்ளைகளின் கடமை. இளைஞர்களின் கடமை. அவர்கள் எல்லாம் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை” என பேசினார் விக்ரம்.

பொன்னியின் செல்வன்

ஜெயம் ரவி பேசும்போது…

“இந்த படத்திற்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளோம். இதில் எந்த ஊர் எனக்கு பிடித்த ஊர் சிறந்த ஊர் என்று கூற முடியாது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்துமே சிறந்த ஊர் தான். ஏனென்றால் இது நம் நாடு நம் இந்தியா. ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக இந்த பயணம் மேற்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது” என பேசினார்.

சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்த விழாவில் மணிரத்னம் சரத்குமார் கார்த்தி உள்ளிட்டார் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்

Vikram appeals to take elders safely to ‘PS1’ movie

எங்கள் ‘பொன்னியின் செல்வன்’ குழந்தைக்கு எது அழகு? என்று சொல்லுங்கள் – விக்ரம் பிரபு

எங்கள் ‘பொன்னியின் செல்வன்’ குழந்தைக்கு எது அழகு? என்று சொல்லுங்கள் – விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இன்று பட குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர்கள் விக்ரம் ஜெயம் ரவி பார்த்திபன் விக்ரம் பிரபு நடிகைகள் திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி, சோஃபிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது…

“ஒரு குழந்தையை நாங்கள் பெற்றெடுத்துள்ளோம் அந்த குழந்தையை மக்களிடம் நாளை தரவிருக்கிறோம் .

அந்த குழந்தைக்கு கண்ணழகு.. காது அழகு.. மூக்கு அழகு என ஒவ்வொரு பகுதிகளாக பார்த்து சொல்வது போல இந்த படம் அமைந்துள்ளது. படத்தை பார்த்து அனைவரும் ஆதரவு தாருங்கள்” என பேசினார் விக்ரம் பிரபு.

பார்த்திபன் பேசும்போது…

” நானே வருவேன்.. நானே வருவேன்.. என அடம் பிடித்து தான் இன்று வந்தேன். இந்த படத்தை காண தஞ்சாவூர் செல்லலாம் என இருந்தேன்.

எனவே இன்றே தஞ்சாவூர் செல்ல நினைத்திருந்தேன். ஆனால் படக்குழு அழைத்த போது நானே வருவேன் என அடம்பிடித்து வந்தேன்.” என அவரது பாணியில் கலகலப்பாக பேசினார் பார்த்திபன்.

நடிகை திரிஷா பேசும்போது…

” நாங்கள் பொன்னின் செல்வன் படத்திற்காக பயணம் செய்த போது என் காஸ்ட்யூம் அழகாய் இருந்ததற்கு காரணம் என்னுடைய காஸ்டியூமர் தான். கண்டிப்பாக இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இந்த படத்திற்காக மணிரத்னம் அவர்கள் என்னை அனுகியதற்காக அவருக்கு நன்றி. முதன்முறையாக இத்தனை நட்சத்திரங்களுடன் ஒரு பிரம்மாண்டமான படத்தின் நடித்திருக்கிறேன். நீங்கள் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என பேசினார் த்ரிஷா.

சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்த விழாவில் மணிரத்னம் சரத்குமார் கார்த்தி உள்ளிட்டார் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows