தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பல படங்களுக்கு தயாரிப்பாளராகவும் ஒரு சில படங்களில் மிரட்டல் வில்லனாகவும் அசத்தியவர் ஆர்.கே. சுரேஷ்.
இவர் முதன்முறையாக பில்லா பாண்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
இதில் இந்துஜா மற்றும் சாந்தினி இருவரும் நடிக்கின்றனர்.
இப்படத்தை பிரபல நடிகரான ராஜ் சேதுபதி இயக்க, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார் எம்.எம்.எஸ். மூர்த்தி. இளையவன் என்பவர் இசையமைக்கிறார்.
வீரகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜாமுகம்மது எடிட்டிங்கை கவனிக்கிறார்.
கேசி. பிரபாத் இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீமான், சூரி, வேல ராம மூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் சீமான் பேசும்போது…
பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழான்னு சொல்லாதீங்க. பாடல்கள் வெளியீட்டு விழான்னு சொல்லுங்க. இசையை நாம் வெளியிட முடியாது.
மலையாள சினிமாவில் எழுத்தாளருக்கு மரியாதை உண்டு. ஆனால் இங்கே எழுத்தாளர்களை கதாசிரியர்களை மதிப்பதில்லை.
ஹீரோக்கள் சொல்வதையே கேட்கிறார்கள். அவர்கள் தான் ஹீரோயின் யார்? என்பதை முடிவு செய்கிறார்கள்.” என பேசினார்.
Politician Seeman speech at Billa Pandi audio launch