பாசத்தமிழன் ஆர்.கே.சுரேஷ் பெயரில் திருத்தம் சொன்ன சீமான்

பாசத்தமிழன் ஆர்.கே.சுரேஷ் பெயரில் திருத்தம் சொன்ன சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh must make some corrections in his name says Seemanவில்லன் நடிகரும் பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷ் அவர்கள் பில்லா பாண்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும் இவரது நடிப்பில் வேட்டை நாய் என்ற படமும் உருவாகிவருகிறது.

இந்நிலையில் பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சீமான் கலந்துக் கொண்ட போது….

தமிழர்கள் மட்டும்தான் தன் பெயருக்கு முன்னால் ஆங்கிலத்தில் இன்சியல் போடுகிறார்கள். அதையும் தமிழில்தான் போட வேண்டும்.

சுரேஷ் களஞ்சிய தேவரின் மகன். எனவே அவர் ஆர்.கே. சுரேஷ் என ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினார்.

பில்லா பாண்டி பட போஸ்டர்களில் பாசத்தமிழன் ஆர்.கே.சுரேஷ் என்ற டைட்டில் கார்டு போடப்படுகிறது.

RK Suresh must make some corrections in his name says Seeman

மலையாளத்திலும் ஹீரோவாக அறிமுகமாகிறார் ஆர்.கே. சுரேஷ்

மலையாளத்திலும் ஹீரோவாக அறிமுகமாகிறார் ஆர்.கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh Hero debut movie in Malayalam titled Cochin Saadhi at Chennai 03தயாரிப்பாளர், வில்லன் நடிகர் என வலம் வந்த ஆர்கே சுரேஷ் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர் நாயகனாக அறிமுகமாகும் பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிலேயே மலையாள சினிமாவில் இவர் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.

இப்படத்திற்கு கொச்சின் ஷாதி அட் சென்னை 03 (Cochin Shaadhi at Chennai 03) என்று பெயரிட்டுள்ளனர்.

ஆர்.கே. சுரேஷ் இதற்கு முன்பே ஓரிரு மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RK Suresh Hero debut movie in Malayalam titled Cochin Shadhi at Chennai 03

rk suresh debut malayalam movie

ஆலுமா டோலுமா பாணியில் ரஜினிக்கு ட்யூன் போட்ட அனிருத்

ஆலுமா டோலுமா பாணியில் ரஜினிக்கு ட்யூன் போட்ட அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh composed music for Rajini in Aaluma Doluma styleசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் பிரபல இயக்குனர் மகேந்திரன், சசிகுமார், விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை செம குத்து பாடலாக ட்யூன் போட்டுள்ளாராம் அனிருத்.

இந்த பாடல் அஜித்தின் வேதாளம் படப்பாடலான ஆலுமா டோலுமா பாடல் பாணியில் இருக்கும் என பேட்ட படத்தில் பங்கு பெற்ற ஒரு நடிகர் கூறியுள்ளார்.

Anirudh composed music for Rajini in Aaluma Doluma style

முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால ஈசியா இருந்துச்சி…; *பரியேறும் பெருமாள்* எடிட்டர் செல்வா

முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால ஈசியா இருந்துச்சி…; *பரியேறும் பெருமாள்* எடிட்டர் செல்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Editor Selva interview about Pariyerum Perumal Successஇயக்குநர் பா.இரஞ்சித்தினுடைய “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.

கதை மாந்தர்கள், கதைக் களம், கதை சொல்லும் பாங்கு, கதை கூறும் கருத்து என அத்தனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கான முழு சினிமாவாக பரியேறும் பெருமாள் உருவாக திரைக்குப் பின்னால் உழைத்தவர்கள் பலபேர். இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீஈதர், கலை இயக்குநர் ராமு, எடிட்டர் செல்வா ஆர்.கே ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.

இவர்களில் குறிப்பாக படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே -வுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை பரியேறும் பெருமாள் திரைப்படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

அடிப்படையில் விசுவல் கம்யூனிகேசன் படித்தவரான செல்வா, பிரபல படத் தொகுப்பாளர் பிரவீன் கே.எல் இடம் ” மங்காத்தா” உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.

பிறகு பா.இரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படத்தில் அசோசியேட் எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார்.
பின்னர் ஜெயம் ரவி நடித்த “அப்பாடக்கர்” படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் “ராஜா மந்திரி”, காலக்கூத்து ” கத்திச் சண்ட”, “இவன் தந்திரன்” படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இப்படி சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தவரை “பரியேறும் பெருமாள்” ஜெட் வேகத்தில் பறக்கச் செய்திருக்கிறது.

இந்த உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “இரஞ்சித் அண்ணா என்னைக் கூப்பிட்டு, ” நீலம் புரடொக்சன்ஸ்” முதல் படம் பண்ண போறோம், இதுதான் ஸ்கிரிப்ட், ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு.. அப்படின்னு சொன்னார்.

இயக்குனர் மாரிசெல்வராஜிடம் ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சிட்டு போய், யார் அந்த அப்பா கேரக்டர் பண்ண போறாங்கன்னு கேட்டேன். மேலும், முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால என்னால ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது.

இயக்குனர் மாரி செல்வராஜிடம் பேசிய பிறகு இப்படிப்பட்ட கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன் அதனால் எளிதாக ஆர்வத்துடன் வேலைசெய்ய ஆரம்பித்தோம்.

அதனால விசுவலா படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும் போது என்னால புரிஞ்சிகிட்டு வேலை பார்க்க முடிஞ்சது.

இயக்குநர் மாரி செல்வராஜ் எடிட்டிங்கிற்கு உட்காரும் போதே, அந்த காட்சியின் பிண்ணனியைக் குறித்தும், அதன் எமோஷன் குறித்தும் விளக்கி விடுவார். அது இன்னமும் எனக்கு வேலை செய்ய சுலபமாய் அமைந்தது.

இந்த வெற்றி எனக்கு பெரிய திருப்புனையையும், நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணாவிற்கும், மாரி செல்வராஜுக்கும் எனது நன்றிகள்” என்கிறார் படபடவென்று…

Editor Selva interview about Pariyerum Perumal Success

நோட்டா தோல்வி. விமர்சனங்களை ஏற்ற விஜய் தேவரகொண்டா விளக்கம்

நோட்டா தோல்வி. விமர்சனங்களை ஏற்ற விஜய் தேவரகொண்டா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nota posterதெலுங்கில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த வாரம் வெளியான படம் நோட்டா.

ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.

நோட்டா என்ற அரசியல் ஆயுதம் இருந்ததால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் படு தோல்வியை தழுவியது.

இந்த விமர்சனங்களை பார்த்த விஜய் தேவரகொண்டா தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

‘நோட்டா’ படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு நன்றி.

நோட்டா படத்தில் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். பட விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.

அடுத்தடுத்த படங்களில் அந்த குறைகளை சரி செய்வேன்.” என பதிவிட்டுள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற இந்திய மேளாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜப்பானில் நடைபெற்ற இந்திய மேளாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth fans celebration at India Mela 2018 event at Japanசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியாவைப் போல் ஜப்பான் நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர்.

அங்கு அவர்கள் ரஜினி பட ரிலீசை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அண்மையில் அங்குள்ள கோபே என்ற நகரத்தில் சில தினங்ளுக்கு முன் (அக். 6,7,8) ஆகிய நாட்களில் இந்திய மேளா 2018 நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினரும் கலந்து கொண்டனர்.

அங்கு ரஜினிகாந்த் பாடல்களைப் பாடி நடனமாடி விழாவை சிறப்பித்தார்கள்.

அங்கு ரஜினிகாந்த் போஸ்டர்கள் கொண்ட ஸ்டால் ஒன்றையும் வடிவமைத்திருந்தனர்.

மேலும் அதிலிருந்து வசூலாகும் தொகையை ஜப்பானில் தமிழ் பட திரையிடல் மற்றும் தமிழர்களுடன் பரிமாற்ற நிகழ்வுகள் ஆகியவற்றிற்கான ஒரு நிதியாக அதைப் பயன்படுத்தப் போவதாக அந்த மன்றத்தினர் அறிவித்துள்ளனர்.

Rajinikanth fans celebration at India Mela 2018 event at Japan

rajini fans petta japan

More Articles
Follows