வேற ஆளே கிடைக்கலையா.?; விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் மனைவி கிண்டல்

வேற ஆளே கிடைக்கலையா.?; விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் மனைவி கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலையும் சினிமா உலகையும் பரபரப்பாகிய விவகாரம் என்றால் அது சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தான்.

சீமானை சிறைக்குள் தள்ளாமல் விடமாட்டேன். கடந்த அதிமுக ஆட்சியில் சீமான் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை.. எனவே தற்போது திமுக ஆட்சியில் புகார் அளிக்க வந்துள்ளேன் என்று பரபரப்பாக பேசி இருந்தார்.

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் விஜயலட்சுமி. இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த சீமான் சில தினங்களில் கடுப்பாகி பல பேட்டிகள் கொடுத்தார்.

“என்னை சீண்டாதீங்க.. தாங்க மாட்டீங்க.. நான் ஒரு மாதிரி.. என்றெல்லாம் பேட்டியளித்தார். விஜயலட்சுமியின் புகாரை தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் சீமான் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகி சீமான் தரப்பில் பல கேள்விகளை முன் வைத்தனர்.

14 வருடங்களுக்கு இந்த வழக்கை மீண்டும் எடுக்க என்ன காரணம்? விஜயலட்சுமி திருமணம் செய்தது தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் ஆதாரங்கள் இருக்கிறதா என்ற கேள்விகளை எல்லாம் முன் வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திடீரென ஓரிரு தினங்களுக்கு முன் நள்ளிரவில் சீமான் மீது கொடுத்த புகார்களை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி.

சீமான் தமிழ்நாட்டில் பெரிய ஆளு.. அவரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.. காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. என்னை யாரும் மிரட்டி இந்த மனுவை வாபஸ் பெற சொல்லவில்லை என்றெல்லாம் பேட்டி அளித்தார்.

அதன் பின்னர் நேற்று செப்டம்பர் 18ஆம் தேதி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தற்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அப்போது சீமான் அருகில் அவரது மனைவியும் இருந்தார். இந்த விவகாரம் குறித்து உங்கள் மனைவியின் ரியாக்ஷன் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்..

அதற்கு சீமான் பதில் அளிக்கும் போது.. எவ்வளவு பொம்பளைங்க இருக்காங்க விஜயலட்சுமி தான் உங்களுக்கு கிடைச்சாளா.? என கூறினார்” என பதில் அளித்தார் சீமான்.

Seaman wife reaction in Actress Vijaylakshmi issue

போஸ்டர் மட்டும்தான் காப்பியா.? ஜெயம் ரவி – பிரியங்கா இணைந்த ‘பிரதர்’ பட பர்ஸ்ட் லுக்.!

போஸ்டர் மட்டும்தான் காப்பியா.? ஜெயம் ரவி – பிரியங்கா இணைந்த ‘பிரதர்’ பட பர்ஸ்ட் லுக்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

‘பிரதர்’ படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கே ஜி எஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘பிரதர்’ திரைப்படத்திற்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த ‘மாறன்’, ஜிவி பிரகாஷ் நடித்த ‘செம’ மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

பிரதர்

‘பிரதர்’ குறித்து பேசிய இயக்குநர் எம். ராஜேஷ் பேசியதாவது….

“ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் ‘ஜெயம்’, ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, மற்றும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை.

இந்த வரிசையில் ‘பிரதர்’ இணையும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

இப்படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.

கூடுதல் தகவல்…

பிரதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அடித்த நிலையில் சில ரசிகர்கள் இந்த டிசைன் ஒரிஜினலை சுட்டிக்காட்டி உள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டில் வெளியான ‘பிரீத் ஆப் டெஸ்டினி’ என்ற கொரியன் சீரிஸ் படத்தின் போஸ்டர் காப்பி என தெரியவந்துள்ளது.

போஸ்டர் மட்டும்தான் காப்பியா.? கதையும் காப்பியா.? காத்திருப்போம்…

பிரதர்

First look of Jayam Ravi starrer Brother released

திருவண்ணாமலை கதைக்களத்தில் முருகன் இயக்கிய ‘பூங்கா நகரம்’

திருவண்ணாமலை கதைக்களத்தில் முருகன் இயக்கிய ‘பூங்கா நகரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்கும் படம் ‘பூங்கா நகரம்’.

சஸ்பென்ஸ் கலந்த காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக தமன் குமார், ஹீரோயின் ஸ்வேதா டோரத்தி , பிளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பூங்கா நகரம்

பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு, சி.எம் இளங்கோவன் எடிட்டிங், பாடல்கள் நா.ராசா, இசை ஹமரா C.V. நடனம் ராபர்ட் மாஸ்டர், சுரேஷ்.

முக்கிய‌ கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

திருவண்ணாமலையை கதைக் களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றத்தை பிரபல இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் நேற்று செப்டம்பர் 18ல் வெளியிட்டார்.

பூங்காநகரம்

Poonga Nagaram first look launched by KS Ravikumar

Good response for #பூங்காநகரம் Posters l #PoongaNagaram

#AkshayaMovieMakers

@ksravikumardir @ENataraj37203 #LNENataRaj #Punganagaram #EKMURUGAN @murugan62599331 @ksshankar2008 @PRO_Priya

டூப்பு போட மறுப்பு.. 30 ஆண்டுகளாக அவதி.; ‘என் உயிர் தோழன்’ பாபு மரணம்.; பாரதிராஜா இரங்கல்

டூப்பு போட மறுப்பு.. 30 ஆண்டுகளாக அவதி.; ‘என் உயிர் தோழன்’ பாபு மரணம்.; பாரதிராஜா இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1990-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு.

இந்தப்படத்தின் மூலம் ‘என் உயிர் தோழன்’ பாபு என பரவலாக அறியப்பட்டவர்.

இவர், 1991-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பெரும்புள்ளி’ படத்தில் நடித்தார்.

‘பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ படத்துக்குப் பிறகு முன்னணி நாயகனாக பாபு வலம் வந்தார்.

அப்போது ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் ஒப்பந்தமாக நடித்துக்கொண்டிருந்தார். அப்போது சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் உயரமான இடத்திலிருந்து நாயகன் பாபு குதிக்க வேண்டும். ‘டூப் போட்டுக்கொள்ளலாம்’ என இயக்குநர் சொல்லியும் கேளாமல் நானே குதிக்கிறேன், ததரூபமாக இருக்கும் என கூறிவிட்டு பாபு உண்மையாகவே குதித்தார். அப்போது நிலைதடுமாறி விழுந்து அவருடைய முதுகுப்பகுதியில் பலத்த அடிப்பட்டது.

முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட போதும், அந்தச் சம்பவம் பாபுவை அதன் பிறகு நிமிர்ந்து உட்காரக் கூட முடியாதபடி செய்துவிட்டது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது தயார் கவனித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபுவின் உடல்நிலை மோசமானதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.

பாபு

அப்போது கூட இயக்குனர் பாரதிராஜா அவரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, பண உதவியும் செய்தார்.

இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாபு மறைவுக்கு பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்..

அவரின் பதிவில்…

“திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த “என் உயிர் தோழன் பாபு” வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது”. ஆழ்ந்த இரங்கல்.

பாபு

En uyir thozhan movie actor babu passes away

JUST IN நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை.; காரணம் இதுதான்.!

JUST IN நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை.; காரணம் இதுதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நடிகர் இயக்குனர் எடிட்டர் பாடகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளால் அறியப்பட்டவர் இவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பிச்சைக்காரன் 2’ பட சூட்டிங்கில் கலந்து கொண்ட போது பெரும் விபத்தில் சிக்கி இருந்தார்.

‘என் கணவர் கதை முடிந்து விட்டது என்று நானே நினைத்தேன்..’ என விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான பாத்திமா தெரிவித்திருந்தார்.

விஜய் ஆண்டனி மகள்

ஆனால் மக்கள் அன்பினால் கடவுள் அருளால் அவர் மீண்டு வந்து விட்டார் எனது தெரிவித்து இருந்தார்.

தற்போது முன்பை விட விஜய் ஆண்டனி கலகலப்பாக நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று வருகிறார்.

கணவரை மீட்ட சந்தோஷத்தில் இருக்கும் பாத்திமா இன்று தன் மூத்த மகளை இழந்துள்ளார்.

இன்று செப்டம்பர் 19ஆம் தேதி விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் விவரம் வருமாறு…

நடிகர் விஜய் ஆண்டனியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவேரி மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.

Meera/16
D/o Vijay Antony

இறந்த சிறுமி நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் ஆவார்.
மேற்படி இறந்த சிறுமி, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகவும், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கி உள்ளார்.

இதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதன் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர்.

மீராவின் உடல் ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து 12 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து தருவதாக தகவல் வந்துள்ளது.

விஜய்ஆண்டனி – பாத்திமா தம்பதிக்கு மீரா மற்றும் லாரா என இரு மகள்கள் உள்ளனர். தற்போது அவர் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

கூடுதல் தகவல்…

சென்னை காவேரி மருத்துவமனையில் மனம் அழுத்தம் தொடர்பாக கடந்த ஆறு மாதமாக மீரா சிகிச்சை பெற்று வந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Vijayantonys daughter meera suicide

7130 அடி உயர மலைவாழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் ‘எவனும் புத்தனில்லை’

7130 அடி உயர மலைவாழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் ‘எவனும் புத்தனில்லை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் (V Cinema Global நெட்ஒர்க்ஸ்) பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம் ” எவனும் புத்தனில்லை ”

கதை, திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்கியுள்ளார்.

நபி நந்தி, சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

கதாநாயகிகளாக சுவாசிகா நடித்துள்ளார், கெளரவ வேடத்தில் சினேகன் & பூனம் கவுர் நடித்துள்ளார்.

எவனும் புத்தனில்லை

மற்றும் வேல.ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலிமுருகன், எம்.எஸ் .பாஸ்கர், சிங்கமுத்து, முரு, ஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவக்குமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், காதல் சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ராஜா சி.சேகர், இசை மரியா மனோகர்,படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,பாடல்கள் சினேகன், வசனம் எஸ்..டி.சுரேஷ்குமார், கலை இயக்கம் A. பழனிவேல், ஸ்டண்ட் – அன்பறிவு, மிராக்கில் மைக்கேல், மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, மணவை புவன்.

எவனும் புத்தனில்லை

படம் பற்றி இயக்குநர் எஸ்.விஜயசேகரன் பகிர்ந்தவை…

7130 அடி உயர மலை கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வியலையும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் அவர்கள் படும் இன்னல்களை கொண்டு
ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படத்தை உருவாக்கியுள்ளோம்.

ஆக்‌ஷன், த்ரில்லர் வகைப் படமாகத் தயாராகியுள்ள இப்படத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டது விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றார் இயக்குனர் எஸ்.விஜயசேகரன்.

எவனும் புத்தனில்லை

Evanum Buddhanillai movie story line news

More Articles
Follows