தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜப்பான்’ பட சென்சார் அப்டேட் இதோ…

தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜப்பான்’ பட சென்சார் அப்டேட் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.

இப்படத்தில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடித்துள்ளார்.

ஜப்பான்

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

ஜப்பான்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஜப்பான்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜப்பான்

இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

மேலும், ‘ஜப்பான்’ திரைப்படம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான்

japan movie gets U/A certificate by Censor Board

ஜெய்பீம் : முதல்வருக்கு சூர்யா நன்றி.; ‘துணை சேரும் கோடி கரம்’ என ‘தலைவர் 170’ பட இயக்குனர் பகிர்வு

ஜெய்பீம் : முதல்வருக்கு சூர்யா நன்றி.; ‘துணை சேரும் கோடி கரம்’ என ‘தலைவர் 170’ பட இயக்குனர் பகிர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு.. “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம்.

ஜெய்பீம்

நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். #JaiBhim

ஜெய்பீம்

இப்பதிவை பகிர்ந்துள்ள படத்தின் இயக்குநர் ஞானவேல், “உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்..அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி கரம்.” என தெரிவித்துள்ளார்.

ஞானவேல் தற்போது ரஜினிகாந்த் & அமிதாப்பச்சன் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

gnanavel

Jaibhim completed 2 years Suriya Thanks note to CM Stalin

புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி.; நேரில் சென்ற விஜய்

புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி.; நேரில் சென்ற விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனவே விஜய்க்கு அரசியலின் நுழையும் எண்ணம் ஏற்பட்டது.

அதன்படி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்களும் பல இடங்களில் வெற்றி பெற்றனர்.

விஜய்யின் அரசியலை எண்ணத்திற்கு பக்க பலமாக பாலமாக இருந்து வருபவர் புஸ்ஸி ஆனந்த்.

இந்த நிலையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை எடுத்து இன்று நவம்பர் 3ம் தேதி நள்ளிரவில் விஜய் மருத்துவமனைக்கு சென்று ஆனந்த்தை பார்த்து நலம் விசாரித்தார்.

தற்போது புஸ்ஸி ஆனந்த் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஸ்ஸி ஆனந்த்

Bussy Anand hospitalized Vijay met him at hospital.

‘இந்தியன் 2’ இன்ட்ரோ.; கைகொடுத்த ரஜினி – மோகன்லால் – ராஜமௌலி – அமீர் – கிச்சா

‘இந்தியன் 2’ இன்ட்ரோ.; கைகொடுத்த ரஜினி – மோகன்லால் – ராஜமௌலி – அமீர் – கிச்சா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியன் 2

இதில் கமலுடன் காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நாளை நவம்பர் 3ம் தேதி ‘இந்தியன் 2’ படத்தின் இன்ட்ரோ வீடியோஸ் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தியன் 2

இதன்படி தமிழ் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார். ஹிந்தி வீடியோவை நடிகர் அமீர்கான், மலையாள வீடியோவை நடிகர் மோகன்லால், கன்னட வீடியோவை நடிகர் கிச்சா சுதீப் மற்றும் தெலுங்கு வீடியோவை இயக்குனர் ராஜமவுலி வெளியிட உள்ளனர்.

இந்தியன் முதல் பாகம் 1996 இல் வெளியானது. இரண்டாம் பாகம் 2023 இல் தயாராக உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளையும் இது தொடர்பான போஸ்டர்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியன் 2

‘இந்தியன் 2’ திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. அதன்படி ஒவ்வொரு வீடியோவையும் ஒவ்வொரு மாநில மொழிகளில் சிறந்த கலைஞர் வெளியிடுவது இங்கே கவனிக்கத்தக்கது.

(ராஜமவுலி தொடர்பான போஸ்டர் வெளியாகும் முன்பு இந்த செய்தி பதிவிடப்பட்டது.)

இந்தியன் 2

Indian 2 intro will be released by Top Indian Stars

‘அந்நியன் – ஐ’ படத்தில் நடந்தது தங்கலானில் நடக்கல.. ஜீவி-யை நடிக்காதேன்னு சொன்னேன் – விக்ரம்

‘அந்நியன் – ஐ’ படத்தில் நடந்தது தங்கலானில் நடக்கல.. ஜீவி-யை நடிக்காதேன்னு சொன்னேன் – விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான படம் ‘தங்கலான்’.

ஞானவேல் ராஜா தயாரித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சீயான் விக்ரம் பேசியதாவது…

“வரலாற்றில் நடக்கும் நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது என்று என் தந்தை என்னிடம் சொல்லியிருந்தார்.

எல்லா நாட்டிலும் அவர்கள் வரலாற்றைக் கொண்டாடுகிறார்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவில் அது போல் நிறைய விசயங்கள் நடந்துள்ளது ஆனால் இப்போதைய தலைமுறைக்கு அது தெரியவில்லை. டைட்டானிக் காதல் கதை என்றாலும், அதன் பின்னணி, அந்த கதை நடக்கும் இடம் கப்பல், அதன் வரலாறு அது தான் முக்கியம்.

அது போல் நம் வரலாற்றில் நடந்த நிகழ்வை அந்த காலகட்டத்தை அவர்கள் வாழ்க்கையைச் சொல்கிற படம் இது, இந்தப்படத்தைத் திரையில் கொண்டு வருவது அத்தனை கடினமாக இருந்தது. இந்தப்படம் செட்டுக்குள் எடுக்கவில்லை கேஜிஎஃப்பில் போய் அங்கு தங்கி எடுத்தோம், தேள் பாம்பு எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும்.
கல் முள்ளில் வெறும் காலில் நடந்து, அவர்கள் உடை போட்டுக்கொண்டு நடித்தேன்.

முதல் முறை லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன் அது இன்னும் கஷ்டம். டப்பிங்கில் நான் நிறைய மாற்றி விடுவேன், அந்நியனில் ரெமோ எல்லாம் டப்பிங்கில் மாற்றியது தான்.. ஆனால் இந்தப்படத்தில் அது நடக்காது. லைவ்வில் கச்சிதமாக அதே டோனில் பேச வேண்டும்.

கேமராவும் ஷாட் கட்டாகுது ஒரே ஷாட்டில் சுற்றி வரும், ரெஸ்ட்டே இருக்காது. ஆனால் எத்தனை கஷ்டப்பட்டாலும் மறுநாள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் நான் இது மாதிரி உணர்ந்ததே இல்லை, ரஞ்சித்திற்கு நன்றி. ரஞ்சித் சார்பட்டா படத்தை விட 100 மடங்கு உழைத்திருக்கிறார்.

நான் முன்னமே எந்தப்படத்திலும் இல்லாத மாதிரி இருக்க வேண்டும் என முடிவு பண்ணித்தான் இந்தப்படம் செய்தேன்.. ரஞ்சித் மிக அற்புதமான இயக்குநர் அதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். ஜீவி இந்தப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார். அவர் நடிக்க வந்தபோது வேண்டாம் நடிக்காதே, இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் நடித்தால் எனக்கு வாய்ப்பு வராதே என நகைச்சுவையாகச் சொன்னேன்.

ஜீவி நடிப்பதால் இசை நன்றாக வருமா ? என நினைத்தேன் ஆனால் நடித்துக்கொண்டே எப்படி இப்படி பிரமாதப்படுத்துகிறார் என்று தெரியவில்லை, அவர் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் பெரிய படங்களில் அசத்துகிறார். ஞானவேல் ராஜாவுடன் முன்பே படம் செய்யப் பேசினோம், இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. இது எல்லோருக்கும் மிக முக்கியமான படமாக இந்திய சினிமாவில் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி.

இதனிடையே ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Gvprakash pls dont act Vikram speech at Thangalaan Teaser Launch

பிரமிக்க வைத்த விக்ரம்.; ‘தங்கலான்’ படம் ஜிவி.பிரகாஷ் கையில்தான்.. – ரஞ்சித்

பிரமிக்க வைத்த விக்ரம்.; ‘தங்கலான்’ படம் ஜிவி.பிரகாஷ் கையில்தான்.. – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான படம் ‘தங்கலான்’.

ஞானவேல் ராஜா தயாரித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது…

‘தங்கலான்’ டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும் இது டீசர் வெளியீடு தான்.. இன்னும் பல மேடைகள் இருக்கிறது.

இந்தப்படம் நாங்கள் நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால் இன்று வரை அதைப்பற்றி ஒரு கேள்வி கூட ஞானவேல் சார் கேட்கவில்லை. அவருக்கு எனக்குமான உறவு 10 ஆண்டுகளுக்கு மேலானது.

அட்டகத்தி-யில் இருந்து இப்போது வரை தொடர்கிறது. அவர் கமர்ஷியல் தயாரிப்பாளர்.. ஆனால் அவர் ஆர்டிஸ்டிக் படம் எடுக்கிறார் என்றால் என் கூடத்தான் செய்வார். அந்தளவு என்னை நம்புகிறார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என நினைக்கிறேன்.

அவரைத் திருப்திப்படுத்துவது கஷ்டம், இந்த டீசருக்கு கூட நிறையக் கட் கேட்டார். கடைசியாக அவர் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் திருப்தியாக இருந்தது.

விக்ரம் சார், ஒரு நடிகனாக அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன், அவருடன் இணைந்து வேலைப் பார்க்க வேண்டும் என்று எனக்கே ஆசை இருந்தது. சர்பட்டாவிற்கு பிறகு அவருடன் இணைகிறோம் என்ற போது, என்ன மாதிரி இருக்க வேண்டும் என்று நிறைய யோசித்தோம். இந்தக்கதை சொன்ன போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறி வந்தார்.

பொதுவாக நான் என் நடிகர்களின் கதாப்பாத்திர லுக்கை மாற்ற நிறைய உழைப்பேன், சின்ன சின்னதாக நிறைய வேலை பார்ப்போம்.. ஆனால் முதல் முறையாக விக்ரம் சார் எனக்கு நிறைய சாய்ஸ் தந்தார்.

அவர் அந்த கதாபாத்திரமாக முழுதாக மாறிவிட்டார். இந்தப்படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் பெரியது, இத்தனை வருடத்திற்குப் பிறகும் இத்தனைப் படத்திற்குப் பிறகும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என ஆச்சரியமாக இருக்கும் அவரிடமே கேட்பேன். நடிப்பு தான் அவருக்கு எல்லாமே.

அவருக்கு அடிபட்டு விட்டது ஆனால் அதற்கப்புறம் ஒரு ஆக்சன் காட்சி எடுக்க வேண்டி இருந்தது. காட்சி எடுக்கும் போது அவரால் முடியவில்லை என எனக்குத் தெரியும், என்ன சார் வலிக்கிறதா சார் என்றால் ஆமா என்பார்.

ஆனாலும் ரீடேக்கில் நடிப்பார். அவர் உழைப்பு பிரமிப்பானது. அவர் தான் இந்தப்படத்தைத் தாங்கியிருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர்கள் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள்.

பார்வதி வித்தியாசமான ஒரு ரோலில் அசத்தியிருக்கிறார். பசுபதியை அவரது கேரக்டரை நீங்கள் எல்லோருமே ரசிப்பீர்கள். இந்தப்படத்தில் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள்.

ஜீவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் இந்தப்படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்ற போது, நடிக்கப் போய்விடுவாரே என்று பயமாக இருந்தது. ஆனால் அதைத்தாண்டி ஒவ்வொரு முறையும் அவர் இசையை என்னிடம் காட்டும் போது பிரமிப்பாக இருந்தது.

அவர் கையில் தான் இந்தப்படம் மொத்தமும் உள்ளது. எடிட்டர் செல்வா பார்த்து, எனக்கே பயம் விஷுவல் பார்த்து என்ன சொல்வார் என நினைப்பேன், அவர் வேலை எப்போதும் சிறப்பாக இருக்கும் இந்தப்படத்திலும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டண்ட் சாம் மிரட்டியிருக்கிறார். கிஷோர் விஷுவல்கள் கண்டிப்பாகப் பேசப்படும். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்கு இந்தப்படம் பிடிக்கும் நன்றி.

Vikram taking all kind of risks after many success says Ranjith

More Articles
Follows