சந்தானம், சூரி இடத்தில் விஜயகாந்த் பட இயக்குனர்

சந்தானம், சூரி இடத்தில் விஜயகாந்த் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Panam Kaaikkum Maram stillsகேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ மற்றும் கரண் நடித்த ‘உச்சத்துல சிவா’ ஆகிய படங்களை இயக்கியவர் ஜேப்பி.

இவர் உச்சத்துல சிவா படத்தில் சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.

எனவே, இப்படத்தை தொடர்ந்து, ‘பணம் காய்க்கும் மரம்’ என்கிற காமெடி படத்தை இயக்கி இதிலும் நடித்துள்ளார்.

நாயகனாக அக்(ஷ)ய் நடிக்க, நாயகிகளாக அகல்யா, அன்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ராஜ் குல்கர்ணி மற்றும் சோனு பாண்டே ஆகியோர் வில்லன்களாக நடிக்க, போஸ் வெங்கட், படவா கோபி, பாரதி கண்ணன், பாலு ஆனந்த், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் பிரபல இசையமைப்பாளரான எல்.வைத்தியநாதனின் மகன் L.V.கணேசன் இசையமைக்க, உச்சத்துல சிவா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஹார்முக் இதிலும் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தொடர்ந்து ஆனந்தலிங்க குமார் இப்படத்தின் படத் தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

படத்தை தர்ஷ் ஷோ கம்பெனி தயாரிப்பில் A.ராமலிங்கம் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு ராதா ஜெயபிரகாஷ்.

இப்படம் குறித்து ஜேப்பி கூறியதாவது…

இதில் நான் ஹீரோவின் அண்ணனாக நடிக்கிறேன்.

தயாரிப்பாளர் ஏ. ராமலிங்கம் சூட்டிங் ஸ்பாட்டில் என் நடிப்பை பார்த்துவிட்டு என்னை நடிக்க இப்படத்தில் நடிக்க வற்புறுத்தினார்.

சந்தானம், சூரி போன்றவர்கள் நடிக்க வேண்டிய கேரக்டர் அது.

முதலில் தயக்கம் இருந்தாலும், அதன்பின்னர் முதல் பிரதியை பார்த்தபோது நிறைவாக செய்திருக்கிறேன் என்கிற நிம்மதி ஏற்பட்டது” என்கிறார் இயக்குனர் ஜேப்பி.

சுசீந்திரன் இயக்கத்தில் கலையரசன்-நிகிலா விமல்..?

சுசீந்திரன் இயக்கத்தில் கலையரசன்-நிகிலா விமல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalaiyarasan nikhila vimalமெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த கலையரசன் தற்போது தனி நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் புதிதாக தயாராகவுள்ள ஒரு படத்தில் இவருக்கு ஜோடியாக கிடாரி படத்தில் நிகிலா விமல் நடிக்கிறாராம்.

இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை பிரபல இயக்குனரான சுசீந்திரன் இயக்க போகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுசீந்திரன் தற்போது, விஷ்னு, ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடிக்கும் மாவீரன் கிட்டு படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்த ஷங்கர்

ரஜினி படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarஷங்கர் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து தகவல்களை இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“இதில் ரஜினியுடன் தான் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் மூன்றில், இரண்டு பங்கு படப்பிடிப்பை 150 நாட்களில் முடித்து விட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பரில் வெளியிட இருக்கின்றனர்.

இப்படம் அடுத்த வருட (2017) தீபாவளிக்கு வெளிவரும் எனத் தெரிகிறது.

காஷ்மோரா படத்தில் நயன்தாரா கேரக்டர் குறித்த தகவல்கள்

காஷ்மோரா படத்தில் நயன்தாரா கேரக்டர் குறித்த தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் கோகுல்.

எனவே இவரது அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வேளையில் கார்த்திக் உடன் கூட்டணி அமைத்தார்.

இதில் கார்த்திக்குடன் முதன்முறையாக நயன்தாராவும் ஸ்ரீதிவ்யாவும் இணைந்தவுடன் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

எனவே படத்தை மிகப்பிரம்மாண்டமாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்தது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பாகுபலி கட்டப்பா போன்ற கார்த்தியின் தோற்றங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சற்றுமுன் நயன்தாராவின் கேரக்டர் குறித்த படத்தை வெளியிட்டுள்ளனர்.

ரத்னமஹாதேவி என்ற இவரது கேரக்டர் பெயரையும் வெளியிட்டுள்ளனர்.

அதில் நயன்தாரா கம்பீரமாக அரியணையில் அமர்ந்து இருக்கிறார்.

இதில் ராணிக்கே உரிய தோற்றத்துடன் காணப்படுகிறார்.

தனுஷ் ரசிகர்களை ஏமாற்றிய கொடி படக்குழு

தனுஷ் ரசிகர்களை ஏமாற்றிய கொடி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kodi dhanushதுரை செந்தில் குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரித்துள்ள படம் கொடி.

இதில் தனுஷ் இருவேடம் ஏற்று நடித்துள்ளார்.

இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானதை தொடர்ந்து படத்தின் ட்ரைலரை மாலை 7 மணிக்கு வெளியிடவிருப்பதாக அறிவித்தனர்.

எனவே தங்கள் அபிமான நடிகரின் கொடி ட்ரைலரை தெறிக்க விட காத்திருந்தனர் தனுஷ் ரசிகர்கள்.

ஆனால், 7 மணியை தாண்டிய பின்பும் எந்த வித அறிவிப்பு இல்லை.

கிட்டதட்ட 35 நிமிடங்கள் கழித்து, இன்று இரவு 10 மணிக்குள் ட்ரைலரை விட்டுவிடுவோம் என்று அறிவித்துள்ளனர்.

அதுவும் சரியான நேரத்தை அவர்கள் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘தனுஷ்-சிவகார்த்திகேயன்… ரெண்டு பேரும் ஒண்ணுதான்’ – துரை செந்தில்குமார்

‘தனுஷ்-சிவகார்த்திகேயன்… ரெண்டு பேரும் ஒண்ணுதான்’ – துரை செந்தில்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush sivakarthikeyan durai senthilkumarதன்னுடைய தரமான படைப்புகளால் பல தேசிய விருதுகளை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவரிடம் உதவியாளராக இருந்த துரை செந்தில்குமார் அவர்கள் எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கினார்.

இந்த இரு படங்களையும் தனுஷ் தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

தற்போது தனுஷ் நடிக்க, கொடி படத்தை இயக்கியுள்ளார் துரை செந்தில்குமார்.

இந்நிலையில் இவரை சந்தித்து..

“தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரையும் இயக்கியிருக்கிறீர்கள்.? என்ன வித்தியாசம்? எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டபோது…

“இருவரும் நடிகர்கள்தான். ரெண்டு பேரும் ஒண்ணுதான். வித்தியாசமில்லை” என்றார்.

More Articles
Follows