தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா இணைந்துள்ள படம் ‘பிகில்’
ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் திரைக்கு வருகிறது.
விஜய் படங்கள் என்றாலே அதிகாலை சிறப்பு காட்சிகள் இருக்கும். ஆனால்
பெரும்பாலான திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி வெளியாகும் பிகில் மற்றும் கைதி உள்ளிட்ட எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சிறப்பு காட்சி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை மீறி சிறப்பு காட்சி திரையிட்டால் சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர்.
இதனால் அதிகாலையில் தளபதி தரிசனம் கிடைக்காதே என விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
சில ஊர்களில் இந்த படம் வெற்றி பெற ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.