தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படங்களை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள மிகப்பிரம்மாண்ட படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’.
இதனை சுருக்கமாக ஆர்ஆர்ஆர் என அழைக்கின்றோம்.
இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடுகின்றனர்.
இப்படம் வரும் கடந்த 2022 ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்து பின்னர் ஒத்தி வைத்தது.
இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமலாகி வருகிறது.
எனவே தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்தது.
இந்திய சினிமாவின் பெருமையைச் சரியான நேரத்தில் நாங்கள் வெளியிடுவோம்” என அப்போது தெரிவித்து இருந்தனர்.
அதன்பின்னர் ஜனவரி 21ஆம் தேதி அன்று ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில்..
கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றால் மார்ச் 18ஆம் தேதி படத்தை வெளியிடுவோம். அல்லது மற்றொரு தேதியாக ஏப்ரல் 28ல் படத்தை வெளியிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது.
அந்த சமயத்தில் தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று ஜனவரி 31ஆம் தேதி மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில்.. மார்ச் 25ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
New release date announced for RRR movie