வலிமை வில்லன் இவரா..? அஜித்துடன் மீண்டும் இணையும் நவ்தீப்

வலிமை வில்லன் இவரா..? அஜித்துடன் மீண்டும் இணையும் நவ்தீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Navdeep to join hands with Ajith again in Valimai வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

அஜித்துடன் நடிப்பவர்கள் யார்? யார்? என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அது உறுதி இல்லை என தெரிந்த நிலையில் தற்போது நவ்தீப் நடிப்பார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்து இருந்தார் நவ்தீப். இந்த படம் 2008ல் வெளியானது.

சமீபத்தில் திரைக்கு வந்த ஜீவாவின் சீறு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் நவ்தீப் என்பது குறிப்பிடத்தக்கது.

Navdeep to join hands with Ajith again in Valimai

BREAKING ரஜினி மலை; அஜித் தல; ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என அமைச்சர் பேச்சு

BREAKING ரஜினி மலை; அஜித் தல; ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என அமைச்சர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay is not equal to Rajini but Ajith can be equal says TN Minsterவிருதுநகரில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“இது அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் அல்ல. அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட் இதுதான்.

தமிழக அரசின் பட்ஜெட் வரி இல்லாத யாரையும் பாதிக்காது.

நடிகர் விஜய்யிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை.

ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித்தான். ரஜினி மலை; அஜித் தலை” என பேசினர்.

Vijay is not equal to Rajini but Ajith can be equal says TN Minster

‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’!

‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

alambana‘சில்பகலா புரடக்சன்ஸ்’ சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் ‘ஆலம்பனா’. இப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் – பிரகாஷ், இயக்கம் – எடிசன் ராபர்ட், இசை – அகில்கிருஷ்ணா, ஒளிப்பதிவு – பிஜு போத்தன் கோடு.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் எடிசன் ராபர்ட் கூறுகையில்,

இப்படத்தில் கதாநாயகனாக கிருஷ்ணகுமார் கதாநாயகியாக கல்யாணி நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நந்தன், விஷ்ணு, காவியா, ஜோஸ்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒரு பார்வையற்ற தாத்தா ஆறு ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கிறார். அந்த ஆறு குழந்தைகளும் பிச்சை எடுத்து வந்து தாத்தாவிடம் பணம் கொடுக்கிறார்கள். தாத்தா அவர்களுக்கு உணவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்.

ஒரு கட்டத்தில் தாத்தா இறந்து விட ஆறு குழந்தைகளும் அனாதை ஆகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத நேரத்தில் அவர்களை தேடி ஒரு பாட்டி வருகிறார்.
அவர் யார்? ஏன் அவர்களை தேடி வந்தார் என்பதை எதார்த்த வாழ்வியலோடு சொல்லி இருக்கும் படம் தான் ‘ஆலம்பனா’.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. சென்னை, கேரளா மற்றும் UK வில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

‘அயலான்’ படத்தில் 3 வேடத்தில் அசத்தும் சிவகார்த்திகேயன்

‘அயலான்’ படத்தில் 3 வேடத்தில் அசத்தும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan in ayalaanரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரித்தி சிங் இணையும் படம் அயலான்.

இந்த படம் முன்பே அறிவிக்கப்பட்டாலும் சில பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா-விஜய் சேதுபதி-சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா-விஜய் சேதுபதி-சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaathu Vaakula Rendu Kaadhalகடந்த 2015-ம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் வெற்றிபெற்றது.

விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் அனிருத் இசையமைக்க விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தனுஷ் இல்லாமல் மீண்டும் இணையும் ‘நானும் ரவுடிதான்’ கூட்டணி.?

2016-ம் ஆண்டே இந்த படம் குறித்த தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..

தற்போது செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

மேலும் மற்றொரு நாயகியாக சமந்தாவும் இணைந்துள்ளார்.

படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கவுள்ளதாம்.

கோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ், உற்சாகத்தில் ஜெய்யின் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழு !

கோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ், உற்சாகத்தில் ஜெய்யின் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Jaiஅழுத்தமான கதை, வித்தியாசமான கரு, திரைக்கதை அமைப்பில் நவீனம், உருவாக்கத்தில், தொழில்நுட்ப வல்லமை என அசத்தும் படங்களுக்கு, ரசிகர்களிடம் எப்போதும், எல்லை தாண்டி பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையம் பரவிவிட்ட நவீன இந்தியாவில், ஒரு மொழியில் ஹிட்டடிக்கும் படங்களுக்கு, மற்ற மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமீப காலங்களில் தென் இந்திய திரைப்படங்கள் பெரும் விலையில் ஹிந்தியில் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கப்பட்டு அங்கு மொழிமாற்றம் செய்து திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. நம் தென்னிந்திய படங்களில் தமிழ் படங்களுக்கென்றே பெரும் ரசிகர் கூட்டம் அங்கே இருந்து வருகிறது. இந்த நிகழ்வுகள் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழுவிற்கு தேன் தடவிய உற்சாக செய்தியாக தற்போது மாறியுள்ளது. இன்னும் படமே வெளிவராத நிலையில் படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தின் ஈர்ப்பில் “ப்ரேக்கிங் நியூஸ்” படம் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஹிந்தியில் 1.8 கோடிக்கு ரைட்ஸ் விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இது குறித்து ராகுல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் கூறியதாவது…

தயாரிப்பாளராக ஒரு நல்ல படத்தை உருவாக்குவதில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரம், நம் தமிழ் படங்களுக்கு வட இந்திய நகரங்களில் கிடைக்கும் மிகப்பெரும் வரவேற்பு எனக்கு பன்மடங்கு உற்சாகத்தை தந்திருக்கிறது. வட இந்திய பகுதிகளில் வாழும் மக்கள், நம் தமிழ் படங்களை வெகுவாக ரசிக்கிறார்கள். நம் படங்களில் உள்ள நேர்த்தியும், உணர்வூப்பூர்வமிக்க உறவுகளின் கதைகளும், அவர்களை பெரிதளவில் ஈர்க்கின்றன. எங்கள் “ப்ரேக்கிங் நியூஸ்” படத்தில் இவை அனைத்தும் அச்சு பிசகாமல் அட்டகாசமாக அமைந்துள்ளது. இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியனின் அற்புதமான உருவாக்கத்தில், “ப்ரேக்கிங் நியூஸ்” படம் உலக ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும், அதிரடியான திரைக்கதையில், வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்கதை ஒரு திரில் பயணமாக மூளைக்கு வேலை தரும் திரைக்கதையில் அமைக்கப்பட்டிருந்தாலும், உணர்வுகளையும் சரியாக சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் விஷுவல் எஃபெக்ட்ஸ் தன்மையுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்படியான, பல ஆச்சர்யங்கள் கொண்ட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. நடிகர் ஜெய்யின் கடின உழைப்பும்,அர்ப்பணிப்பும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் மிளிரும். பட வெளியீட்டிற்கு முன்பே வெற்றிக்கு அடையாளமாய் ஹிந்தி ரைட்ஸ் பெரும் விலைக்கு விற்கப்பட்டது படக்குழு அனைவருக்கும் பெரிய உற்சாகத்தை தந்திருக்கிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரையும். தற்போது படப்பிடிப்பு முடிந்து, இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. கவரும் படத்தை வருகிற 2020 மே மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் “ப்ரேக்கிங் நியூஸ்” தமிழில் முதல் முறையாக வித்தியாசமான சூப்பர்ஹீரோ வகை படமாக உருவாகியுள்ளது. “வேதாளம்” புகழ் ராகுல் தேவ், “சுறா” புகழ் தேவ் கில் ஆகிய இருவரும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள். பழ கருப்பையா, இந்திரஜா, மானஸ்வி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பானு ஶ்ரீ நாயகன் ஜெய் மனைவியாக, இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்க, ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். கிட்டதட்ட 400 தொழில் நுட்ப கலைஞரகள் தினேஷ் குமார் மேற்பார்வையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிளை வடிவமைத்து வருகிறார்கள். N M மகேஷ் கலை இயக்கம் செய்ய, ராதிகா நடன அமைப்பை செய்துள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குநராக ஸ்டன்னர் சாம் பணியாற்ற, தேனி சீனு புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

More Articles
Follows