புடவை டிசைனில் நாக சைதன்யாவிடம் காதலை சொன்ன சமந்தா

புடவை டிசைனில் நாக சைதன்யாவிடம் காதலை சொன்ன சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naga Chaitanya and Samantha‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பில் ‘கார்த்திக் – ஜெஸ்ஸி’யாக நடித்தனர் நாக சைதன்யா – சமந்தா.

அன்று முதலே நிஜ காதலர்களாக வலம் வர ஆரம்பித்தனர்.

அதன்படி நேற்று இவர்களின் காதல் நிச்சயத்தார்த்தம் வரை வந்துள்ளது.

இதில் அழகான வேலைப்பாடுகள் கூடிய சேலையை அணிந்திருந்தார் சமந்தா.

அந்த டிசைனில் சே (காதலரை செல்லமாக இப்படித்தான் அழைக்கிறார் சமந்தா) உடன் அவரின் முக்கிய நிகழ்வுகளை அழகாக வடிவமைத்துள்ளார்.

இந்த புடவையை சமந்தாவின் டிசைனர் க்ரேஷா பஜாஜினுடைய ‘கோயிஷ் (Koesch)’ நிறுவனம் வடிமைத்துள்ளதாம்.

”என் அம்மா எனக்கு மகளாயிருக்கிறார் என்றும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்று நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

‘மனம்’ படத்தில் நாகார்ஜுனாவின் அம்மாவாக சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Naga Chaitanya and Samantha got engaged

அந்த புடவை டிசைன் இதோ….

samantha engagement

லாரன்ஸ் ஏன் இப்படி செய்கிறார்? புலம்பும் ரசிகர்கள்

லாரன்ஸ் ஏன் இப்படி செய்கிறார்? புலம்பும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava lawranceஒரு பக்கம் சமூகம் சார்ந்த சேவைகள் மறுபக்கம் கலையுகப் பணிகள் என ஓய்வில்லாமல் உழைத்து வருபவர் ராகவா லாரன்ஸ்.

இதனிடையில் நேற்று பிற்பகல், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில், லாரன்ஸ் தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்ததற்காகவும், மாணவர்கள் போராட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்ததற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தன் கலைப்பணிகளில் முழுமூச்சுடன் இறங்கிவிட்டார் லாரன்ஸ்.

லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கியுள்ள மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் பி. வாசு இயக்கியுள்ள சிவலிங்கா ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் (பிப்ரவரி 17) வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தன்னுடை இரண்டு படங்களையும் லாரன்ஸ் ஏன் ஒரே நாளில் வெளியிடுகிறார்?

இரண்டு படங்களும் மோதிக் கொண்டால் ஒரு படத்தின் வசூல் மற்ற படத்தை பாதிக்காதா? இதை லாரன்ஸ் கவனிப்பாரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Raghava lawrance going to release his 2 movies in same date

lawrance 2 movies

தல-தளபதி மீண்டும் இணைய வாய்ப்பு; காத்திருக்கும் ரசிகர்கள்

தல-தளபதி மீண்டும் இணைய வாய்ப்பு; காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajithராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்துவிட்டனர்.

இனிமேல் அவர்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்குமா? என்பது நிச்சயமில்லாத ஒன்றுதான்.

ஆனால் அதன்பின்னர் அவர்கள் எங்கேயாவது இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் மட்டுமே உண்டு.

அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர் என்பதால் இதுபோன்ற போட்டோக்கள் இனிமேலும் கிடைப்பது அரிதாகிவிட்டது.

சில வருடங்களுக்கு முன்பு மங்காத்தா மற்றும் வேலாயுதம் ஆகிய படங்களின் சூட்டிங் ஒரே தளத்தில் நடைபெற்றதால் இருவரும் சந்தித்து போஸ் கொடுத்தனர்.

அதன்பின்னர் அவர்கள் மீண்டும் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் இணையவிருக்கிறார்களாம்.

அட்லி இயக்கும் விஜய் படமும், சிவா இயக்கும் அஜித் படமும் ஒரே இடத்தில் நடைபெற உள்ளதால், இருவரும் மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay and Ajith meeting will happen very soon at shooting

ஜல்லிக்கட்டு போலீஸ் கலவரம் குறித்து சூர்யா பரபரப்பு பேச்சு

ஜல்லிக்கட்டு போலீஸ் கலவரம் குறித்து சூர்யா பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyaஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம்-3 (சி3) பிப்ரவரி 9ல் திரைக்கு வருகிறது.

உலகமெங்கும் 1500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் இப்படக்குழுவினர்.

அப்போது ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவில் போலீஸ் நடத்திய கலவரம் குறித்து சூர்யாவிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்து சூர்யா பேசும்போது…

‘ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சில இடங்களில் விரும்பத்தக்காத செயல்கள் நடந்ததை அறிந்தேன்.

ஏதோ ஒரு சில போலிஸ் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த போலீஸ் ஆபிசர்களையும் எளிதாக குறை சொல்லமுடியாது. எல்லாரும் அப்படியில்லை” என்றார்.

Suriyas reaction to Police violence in Jallikattu Protest

chennai-police-fire-Jallakattu

‘ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் மாஸ்; சம்பளம் நெக்ஸ்ட்’ – ஞானவேல்ராஜா

‘ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் மாஸ்; சம்பளம் நெக்ஸ்ட்’ – ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer gnanavel rajaசூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்கவும், அவரது வசூல் சாதனைகளையும் நெருங்கவும் பல நடிகர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், அவரை நெருங்க முடியாமல் போனதால், அவரை ஒப்பிட்டு பேசாமல், Non-Rajini Record என்று தங்கள் சாதனைகளை கூறிவருகின்றனர்.

வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி சூர்யா நடித்துள்ள சி3 படம் ரிலீஸ் ஆகிறது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

வழக்கம்போல இச்சந்திப்பிற்கு ஹீரோயின்கள் வரவில்லை.

அப்போது படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது…

“சில விஷயங்களை இங்கே சூர்யா அனுமதியுடன் கூற விரும்புகிறேன்.

ஆந்திராவில் ரஜினிக்கு அடுத்த மார்க்கெட்டை சூர்யா பிடித்துள்ளார்.

நடிகர்களின் சம்பளத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

அவர்களின் மார்கெட் வேல்யூவையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சி3 படம் இப்போதே லாபத்தை நெருங்கிவிட்டது.

அது ரூ. 200 கோடியை தாண்டி வசூலிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.

Suriya is next to Rajinis market says Gnanavelraja

சிக்ஸ் பேக் ஹீரோக்களுக்கு ராதாரவி அட்வைஸ்

சிக்ஸ் பேக் ஹீரோக்களுக்கு ராதாரவி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radharavi speechமிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் அஜய், நாயகி அபிநயா, பேபி சாதன்யா, பழனி, பாடகர் தாமஸ் ஆண்ட்ரூஸ் மற்றும் இயக்குநர் மைக்கேல் அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் ‘டத்தோ’ ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், கிருத்திகா உதயநிதி, அறிவழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினகர்ளாக கலந்து கொண்டனர்.

விழாவில் ராதாரவி பேசியதாவது…

“இப்படத்தின் நாயகி அபிநயாவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.

அவரை நான் நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினாராக சேர்த்து இருக்கிறேன்.
அவர் மிகவும் திறமையான பெண்.

என் தந்தை எம். ஆர். ராதாவின் குரல் கரகரப்பாக இருக்கும். ஆனால் அதற்கே இசையமைத்தவர் சங்கர் கணேஷ்.

அவர் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி.

அதுபோல் இங்கு வந்திருக்கும் நட்ராஜ் நல்ல உயரமான திறமையான நடிகர்.

அவர் இப்போ ஒல்லியாக இருக்கிறார். ஏன்? என்று கேட்டேன்.

அதற்கு அவர் அடுத்த படத்திற்காக இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக சொன்னார்.

இவரைப் போல நிறைய நடிகர்கள் சிக்ஸ்பேக் வைக்கிறார்கள்.

ஆனால் எம்ஜிஆர் சிவாஜி எல்லாம் உடம்பை குறைக்கவும் இல்லை. ஏற்றவும் இல்லை. அவர்கள் நன்றாக நடிக்கவில்லையா?

உடம்பை ஏற்றி இறக்கிய சில ஹாலிவுட் நடிகர்கள் இன்றைய நிலையை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

சினிமாவுக்காக இப்படி செய்கிறீர்கள். ஆனால் உங்கள் உடலையும் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பேசினார்.

More Articles
Follows