தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் நாகர்ஜுனா. இவரது மகன் குறித்து இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது…
“ என் மகன் நாகசைதன்யா ஒரு பெண்ணை மணக்க தேர்ந்தெடுத்திருக்கிறார். இதனால் நானும், என் மனைவி அமலாவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.
விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்” என்றார்.
நாகர்ஜுனா, மணப்பெண்ணாக குறிப்பிட்டது நடிகை சமந்தாவைத் தான் என டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
நாக சைதன்யாவும் சமந்தாவும் தெலுங்கில் “விண்ணைத் தாண்டி வருவாயா”மற்றும் “மனம்” என்று ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
அந்த சமயங்களில் இவர்களின் காதல் பற்றி செய்திகள் வந்தபோது இருவரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.