தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாசர், விஷால் தலைமையிலான அணி பதவியேற்றது முதல் நடிகர் சங்கத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறது.
சங்கத்திற்கான புதிய கட்டிடம் வருகிற 2018ஆம் ஆண்டு பொங்கல் அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பாக பல நாடுகளில் வரலாற்று நாடகம் அரங்கேறவுள்ளதாம்.
நாசர் இதை தலைமையேற்று ஒருங்கிணைக்க உள்ளார்.
மேலும் இதுகுறித்து விஷால் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…
“இந்த நாடகத்தில் எங்களுக்கான பாத்திரம் இருந்தால் கொடுக்கிறேன் என நாசர் சொன்னார்.
கமல் நிச்சயம் இந்த நாடகத்தில் நடிப்பார். ரஜினி மற்றும் விஜய் இந்த நாடகத்தில் நடிப்பார்களா? எனத் தெரியவில்லை.
அஜித் வாய்ப்பே இல்லை. அவரிடம் கேட்கவும் மாட்டோம். அது அவரவர் விருப்பம். நாம் குறை சொல்ல முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.