தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘கல்லூரி வாசல்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை பூஜா பட்.
இவர் பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் சகோதரி.
நீலகிரி மாவட்டம் ஜெகதலா கிராமத்தில் கடந்த 1978-ம் ஆண்டு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு அப்போதைய கலெக்டர் ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கிடு செய்து அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது என்று நிபந்தனையும் விதித்துள்ளார்.
ஆனால் அந்த நிலம் அதற்குப் பிறகு பலரிடம் கைமாறி விற்பனையாகியுள்ளது.
நீலகிரியில் உள்ள அந்த நிலத்தை கடந்த 1990-ம் ஆண்டு நடிகை பூஜா பட் வாங்கியுள்ளார்.
அந்த நிலத்தை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், நிலத்தை அரசுக்கு திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகை பூஜா பட் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, நீலகிரியில் நடிகை பூஜா பட் நிலம் வாங்கியது செல்லாது என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை யாரும் வாங்கவோ உரிமையில்லை? விற்கவோ உரிமையில்லை? என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
alia bhatts sisters purchase of land in nilgiris is invalid high court order