தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இப்படத்தில் அரசு மருத்துவமனைகளின் அவலத்தையும், இதனால் தனியார் மருத்துவமனைகள் செய்யும் அராஜகத்தையும் கூறியிருந்தனர்.
ஒரு அரசு மருத்துவனையில் ஆக்ஸிஜன் இல்லாததால் குழந்தைகள் இறந்ததும், பெருச்சாளி கடித்து ஒரு குழந்தை இறந்தது பற்றிய உண்மை சம்பவங்களை பற்றி விஜய் பேசியிருந்தார்.
இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் அரசு மருத்துவமனைகளை தவிர்ப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளையும் நாடுவதாகவும், அவர்கள் இதனை வைத்து மக்களை ஏமாற்றி பிழைப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க வருகிறது தமிழக அரசு புதிய சட்டத்தை அமுல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தமிழக அரசியலில் மெர்சல் செய்த புரட்சியாக கருதலாம்.