மெர்சல் புரட்சி: தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க புதிய சட்டம்

மெர்சல் புரட்சி: தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க புதிய சட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersalவிஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இப்படத்தில் அரசு மருத்துவமனைகளின் அவலத்தையும், இதனால் தனியார் மருத்துவமனைகள் செய்யும் அராஜகத்தையும் கூறியிருந்தனர்.

ஒரு அரசு மருத்துவனையில் ஆக்ஸிஜன் இல்லாததால் குழந்தைகள் இறந்ததும், பெருச்சாளி கடித்து ஒரு குழந்தை இறந்தது பற்றிய உண்மை சம்பவங்களை பற்றி விஜய் பேசியிருந்தார்.

இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் அரசு மருத்துவமனைகளை தவிர்ப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளையும் நாடுவதாகவும், அவர்கள் இதனை வைத்து மக்களை ஏமாற்றி பிழைப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனை குற்றங்களை தடுக்க வருகிறது தமிழக அரசு புதிய சட்டத்தை அமுல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழக அரசியலில் மெர்சல் செய்த புரட்சியாக கருதலாம்.

ஜிவி. பிரகாஷுக்கு சின்ன இளைய தளபதி பட்டம்..?

ஜிவி. பிரகாஷுக்கு சின்ன இளைய தளபதி பட்டம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashஇசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரு குதிரைகளில் சவாரி செய்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமல்லாது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இவரது நடிப்பில் செம, 4ஜி, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், அடங்காதே ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இவையில்லாமல், 100% காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தீவிர விஜய் ரசிகரான இவருக்கு சின்ன இளைய தளபதி என்ற பட்டத்தை வழங்கவுள்ளதாகவும், இனி வரும் படங்களின் தலைப்பில் அந்த பெயர் போடப்படவுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இதுகுறித்து ஜிவி. பிரகாஷ் கூறும்போது….

இதுபோன்ற பொய்யான செய்திகளை கேட்டால் எரிச்சல் வருகிறது. நான் விஜய் சாரின் ரசிகர். அவர் எனக்கு அண்ணா. அதைத்தாண்டி ஒன்றுமில்லை. என்று மறுத்துள்ளார்.

10 நாட்கள் ஆகியும் ஒரு நாளைக்கு 7 காட்சிகள்; இதாண்டா மெர்சல்

10 நாட்கள் ஆகியும் ஒரு நாளைக்கு 7 காட்சிகள்; இதாண்டா மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் கடந்த அக், 18ல் தீபாவளியன்று வெளியானது.

இப்படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்களை கடந்துள்ளது.

படத்திற்கு கிடைத்த பாஜக.வின் புரோமோசனால் பட்டி தொட்டிங்யெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில் அக். 28 மற்றும் அக். 29 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 7 காட்சிகளை திரையிட உள்ளதாக சென்னையைச் சேர்ந்த வெற்றி தியேட்டர்ஸ் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒரு படம் ரிலீஸாகி 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும்.

ஆனால் முதன்முறையாக 10 நாட்களை கடந்த பின்னும் 7 காட்சிகள் திரையிடப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

இது விஜய் ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rakesh Gowthaman‏ @VettriTheatres 2m2 minutes ago
#Mersal will have 7 shows this Sat & Sun . Book 8am Spl Morning Show for rear seatings in #Vettri ….

கமல் மீது வழக்குப்பதிய சட்ட நிபுணர்களுடன் போலீஸ் ஆலோசனை

கமல் மீது வழக்குப்பதிய சட்ட நிபுணர்களுடன் போலீஸ் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanடெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனையடுத்து, ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை, நிலவேம்பை விநியோகம் செய்ய வேண்டாம் என தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் கமல்.

எனவே, நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலை பரப்புவதால், கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வரவே நிலவேம்பு விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதியலாம் என நீதிமன்றம் கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அது தொடர்பான செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல்துறை ஆலோசனை செய்துவருவதாக செய்திகள் வந்துள்ளன.

எனவே விரைவில் கமல் மீது வழக்கு பதியலாம் என கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி சர்ச்சை; விஜய்யின் மெர்சல் தெலுங்கு வெர்சன் ரிலீஸ் என்னாச்சு?

ஜிஎஸ்டி சர்ச்சை; விஜய்யின் மெர்சல் தெலுங்கு வெர்சன் ரிலீஸ் என்னாச்சு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

adirindhi stillsவிஜய் நடித்த ‘மெர்சல்’ தெலுங்கு பதிப்பான ‘அடிரிந்தி’ திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகவில்லை.

எனவே இன்று அக்டோபர் 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ‘அடிரிந்தி’ வசனங்கள் மியூட் செய்யப்பட்டு படம் வெளியாவதாக செய்திகள் வெளியாகின.

இதில் ஜிஎஸ்டி காட்சிகள் நீக்கப்படவில்லை என படத்தயாரிப்பு குழு மறுத்துள்ளது.

இதனால் ‘அடிரிந்தி” ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கேமரா நுழையாத காடுகளில் படமாக்கப்பட்ட மரகதக்காடு

இதுவரை கேமரா நுழையாத காடுகளில் படமாக்கப்பட்ட மரகதக்காடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maragathakkaadu movie The Real Gem of Movie in Reelதமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது

இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.

அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன்,ஜே.பி. மோகன்., ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது…

” அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது.

நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.

படம் முழுவதும் தமிழக,கேரள அடர்ந்த வனப்பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை, எந்த பிளாஸ்டிக் பொருளும் பயன்படுத்தப்படவில்லை.

படம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும். அதேபோல காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும் நேசிக்கவும் வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும். ” என்கிறார்.

மேலும் கூறுகையில், தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைவரும், சுவாசிக்கிற காற்று மாசுபடுதுனு கவலைபடுகிற நாம் காற்றே பாற்றாக்குறையாகப்போகுதுனு கவலை இல்லாம இருக்கோம்.

Save water ங்கிறது save air என மாறக்கூடாது என்பதைப் பற்றி மிக ஆழமாகக் கவலைப்பட்டிருக்கும் படம் ’மரகதக்காடு’ என்றார்.

நகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். காதலிக்கிறான்.

அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது. வெறும் இனக்கவர்ச்சியில் மூழ்கி ஆண் – பெண் சேரும் ஒற்றைக் குறிக்கோளை அடைவது மட்டும்தானா காதலின் முடிவாக இருக்க வேண்டும் ?

அவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது அவனது காதல்.

காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது. அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன? முடிவு என்ன? என்பதே கதை.

காதலுடன் காடு, மக்கள், அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள், அவர்களது வாழ்வியல், காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும்.

ஒளிப்பதிவு – நட்சத்திர பிரகாஷ்
இசை – ஜெய் பிரகாஷ்
பாடல்கள் விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி
எடிட்டிங் – சாபு ஜோசப்
கலை – மார்டின் டைட்டஸ்
நடனம் – சாய் மதி
ஸ்டண்ட் – மைக்கேல்
பி.ஆர்.ஓ – A. ஜான்
என ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் இணைந்து படக் குழுவாகியுள்ளது.

‘மரகதக்காடு ‘படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Maragathakkaadu movie The Real Gem of Movie in Reel

Maragathakkaadu working stills

More Articles
Follows