தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார்.
அந்த மர்மநபர்கள் அவரை பாலியல் தொல்லை செய்ததாக புகார் கொடுத்திருந்தார்.
இதுகுறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிரபல நடிகர் திலீப் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே அவரிடம் பலமணி நேரம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
மேலும் பாவனா கடத்தலில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த தகவலின்படி திலீப்பின் 2வது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான கடையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
ஒரு மெமரி கார்ட்டில் பாலியல் செய்யப்பட்ட வீடியோவை அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே விரைவில் நடிகர் திலீப் கைது செய்யப்படலாம் என கேரளாவில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் இதற்கு பின்னணியில் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.
1) ஒருகாலத்தில் பாவனாவும் காவ்யா மாதவனும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிய பாவனாவை பழிவாங்க காவ்யா மாதவன் ஆன் வைத்து இதை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
2) நடிகை மஞ்சு வாரியருடன் திலீப் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்போதே காவ்யா மாதவனுடன் தொடர்ப்பு வைத்திருந்தாகவும், அதை தன் தோழி மஞ்சுவாரியரிடம் பாவனா கூறியதாகவும் கூறப்படுகிறது.
தன் குடும்பம் பிரிய காரணமான பாவனாவை பழிவாங்கவே திலீப் இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கலைஞர்களின் நிஜ வாழ்க்கை சினிமாவையே மிஞ்சி விடும் போலவே..
Malayalam actress Bhavana abduction case Co Star Dileep may be arrested