தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது.
இந்த பட சூட்டிங் நடைபெறும்போது வேறொரு உதவி இயக்குனர் செல்வா என்பவர் இப்பட கதை தன்னுடையைது என்றும் படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து இப்பட இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காப்புரிமை சம்பந்தப்பட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்து வழக்கை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
இதன் பின்னர் வழக்கை வாபஸ் பெறவும், மீண்டும் புதிதாக வழக்கு தொடர அனுமதி கோரியும் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் செல்வா.
இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது. ஆனால் புதிதாக வழக்கு தொடர அனுமதி மறுத்து விட்டது.
எனவே புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து செல்வா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, புதிய வழக்கு தொடர அனுமதியளித்து விட்டார்.
எனவே பிகில் ரிலீசில் சிக்கல் உண்டாக வாய்ப்பு இருக்கலாம் என தெரிகிறது.
Madras high court order in Bigil movie release issue