டைரக்டர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டைரக்டர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian-2-2லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த படம் ‘இந்தியன் 2’.

கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு முன்பே இந்தியன் 2 பட செட்டில் கிரேன் அறுந்து விழுந்ததில் 4 பேர் மரணம் அடைந்தனர்.

இதன் பின்னர் ஊரடங்கு, கமல்ஹாசனின் அரசியல் பணிகள், கமலுக்கு மேக்அப் அலர்ஜி, நடிகர் விவேக் மரணம் போன்ற காரணங்களால் பல மாதங்களாக சூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து கொரோனா 2வது அலை ஊரடங்கும் வந்தது.

இதனிடையில் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படம், ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டானார் ஷங்கர்.

எனவே இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்க தடை கோர்ட்டில் தடை கோரியது லைகா நிறுவனம்.

ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தியது.

இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

எனவே மீண்டும் இந்த பிரச்சனை கோர்ட்டுக்கு வந்தது.

அதன்படி பிரச்சினைக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க இன்று கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் லைகா நிறுவனத்தின் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Madras High Court dismisses injunction filed by Lyca Productions against director Shankar

தயாரிப்பாளர்களுக்கு குட் நியூஸ் : புதிய படங்களை ரிலீஸ் செய்ய அரசு சார்பில் ஓடிடி தளம்

தயாரிப்பாளர்களுக்கு குட் நியூஸ் : புதிய படங்களை ரிலீஸ் செய்ய அரசு சார்பில் ஓடிடி தளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ott indiaகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் நாடெங்கிலும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போது மற்ற வணிகங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை.

தமிழகம் & புதுச்சேரியில் சினிமா & டிவி சீரியல் சூட்டிங்குக்கு 100 பேர் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராகவுள்ள படங்களை அமேசான், நெட் ப்ளிக்ஸ் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இந்த நிலையில், மலையாள படங்களை ரிலீஸ் செய்ய பிரத்யேக ஓடிடி தளத்தை உருவாக்கிட கேரள அரசு முயற்சிப்பதாக கேரள சினிமா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் சஜி செரியன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா ஊரடங்கில் மட்டும் (18 மாதங்களில்) மலையாள திரையுலகம் ரூ.950 கோடிக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளது.

எனவே மலையாள திரைப்படங்களை வெளியிடுவதற்காக பிரத்யேக ஒரு புதிய ஓடிடி தளத்தை அரசு உருவாக்கும்.

சிறிய பட்ஜெட் & சாதாரண படங்களுக்கு இந்த புதிய ஓடிடி தளம் நிச்சயம் தேவைப்படும்.

கேரள அரசு நடத்தும் சித்ராஞ்சலி ஸ்டூடியோ தென்னிந்திய படங்களின் படப்பிடிப்புக்காக அனுமதிக்கப்படும்.”

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Govt to start OTT platform for small budget films

மிடில் கிளாஸ் தந்தையின் கஷ்டங்களை சொல்ல வருகிறாள் ‘ராஜா மகள்’

மிடில் கிளாஸ் தந்தையின் கஷ்டங்களை சொல்ல வருகிறாள் ‘ராஜா மகள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ‘ராஜா மகள்’.

இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

நிக்கிகண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத்தொகுப்பில், மணி அமுதவன் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

பிள்ளைங்க ஆசைப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையை காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசைப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

அதே நேரம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தையும் ஒருங்கே இணைத்து, அழகான கலகலப்பான படமாக உருவாகியிருக்கிறார் இயக்குனர் ஹென்றி.

முழுக்க முழுக்க சென்னை சுற்றுவட்டாரங்களிலும், மகாபலிபுரம், திருத்தணி, போன்ற பகுதிகளிலும், இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், பாடல்கள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Aadukalam Murugadoss turns hero for Raja Magal

378_001

BEAST IN FAST MODE.. ஜார்ஜியா டூ சென்னை டூ ஜார்ஜியா ப்ளானில் படக்குழு

BEAST IN FAST MODE.. ஜார்ஜியா டூ சென்னை டூ ஜார்ஜியா ப்ளானில் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

beast1சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’.

இப்பட பர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு முன்பே இந்த பட சூட்டிங்கை ஜார்ஜியா நாட்டில் நடத்தினர்.

பின்னர் ஊரடங்கால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று ஜுலை 1ம் தேதி முதல் சென்னையில் தொடங்கியுள்ளது.

விஜய் ஆடும் நடனக் காட்சியுடன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்னும் 3 வாரம் சென்னையில் நடைபெறும் என்கின்றனர்.

இதில் விஜய், பூஜா காட்சிகளை படமாக்கப்பட உள்ளனர.

இதன் பின்னர் ஜார்ஜியாவிலும் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்..

Thalapthy Vijay’s Beast movie updates

சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலம் தமிழ்நாடு.. ஆனால்.. – கமல்ஹாசன்

சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலம் தமிழ்நாடு.. ஆனால்.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த சூழலில் ஓராண்டுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்து தன்னலமற்ற சேவையாற்றி வருகிறார்கள் நமது மருத்துவர்கள். அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறேன்.

சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில்தான், அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட குறைவாகவே ஊதியம் வழங்கப்படும் நிலையும் உள்ளது.

‘நீதிமன்ற குமாஸ்தாவின் ஊதியத்தைவிட அரசு மருத்துவர்களின் ஊதியம் குறைவாக இருக்கிறதே…’ என்று உயர் நீதிமன்றமே வேதனையுடன் குறிப்பிட்டது. அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பல முறை வலியுறுத்தியும், மாநில அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, 2009-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2017-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மறுஆய்வு நடைபெறவில்லை. ஊதிய உயர்வு கிடைக்காததால் 2018-ல் போராட்டங்கள் நடைபெற்றன.

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்து அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ள அரசாணை எண் 293-ன் படி மருத்துவப் பணியாளர்களுக்கான ஊதியப் படிகளை மட்டுமே வழங்கியிருக்கிறது.

இதனால் கிராமப் புறங்களில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இல்லை. ஊதியப் படிகளும் குறிப்பிட்ட துறைகளுக்கான மருத்துவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

பல மருத்துவ சங்கங்கள் ஊதியப் படியை மறுத்து ஊதிய உயர்வையே வலியுறுத்தியுள்ளன.

தற்போது உள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் ‘காலம் சார்ந்த ஊதிய உயர்வை’ 5, 9, 11, 12 ஆண்டுகள் என மாற்றி கொடுக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டின் அரசாணை எண் 354-ஐ உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் பல ஆண்டுகளாக மன்றாடி வருகின்றனர்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசு சிலருக்கு மட்டுமே ஊதியப் படிகள் வழங்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் இன்னல்களைக் கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

உங்கள் நான்,
கமல்ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal Haasan talks about doctors hike in TN

‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக்.; ரஜினி ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த மீனா

‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக்.; ரஜினி ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றியும் இசையமைப்பாளராக இமானும் பணிபுரிந்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு, ரஜினியின் உடல் நிலை என பல்வேறு காரணங்களால் இப்படத்தின் சூட்டிங் தடைப்பட்டது. அந்த சமயத்தில் தான் (2020 டிசம்பர் 29ல்) தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்)

ரஜினியின் உடல்நிலை சீரானவுடன் கொரோனா ஊரடங்கிலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு ஹைதராபாத் சூட்டிங்கில் நடித்தார் ரஜினி.

பயோ-பபுள் முறையில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இப்பட சூட்டிங்கை முடித்துவிட்டு கடந்த மே 12 தேதி சென்னை திரும்பினார் ரஜினி.

இந்த படத்தை 2021 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை மீனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அண்ணாத்த’ FIRST LOOK SOON என பதிவிட்டுள்ளார்.

ஆனால் இது ரசிகர் ஒருவர் டிசைன் செய்த போஸ்டர் எனவும் பதிவிட்டுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்திய அரசின் அனுமதி பெற்று சிறப்பு விமானத்தில் சென்று தற்போது அமெரிக்காவில் சிகிச்சைக்காக தங்கியுள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Annaatthe exclusive update by Actress meena

IMG_20210701_180524 (1)

More Articles
Follows