தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என இரண்டு மாதங்கள் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே போராட்டத்தில் ஈடுப்பட்டது.
அதனையடுத்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தயாரிப்பாளர்கள் சங்கம் ரிலீஸ் தேதிக்கான கடிதம் கொடுத்த பின்னரே அந்த தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என அறிவித்தனர்.
பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இந்த நடைமுறையை கடைப்பிடித்தாலும் சில தயாரிப்பாளர்கள் இதை பின்பற்றுவது இல்லை.
அண்மையில் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் மற்றும் விஜய்சேதுபதியின் சீதக்காதி ஆகிய படங்கள் தயாரிப்பாளர்கள் சங்க கடிதம் இல்லாலே படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்தனர்.
இதில் சீதக்காதி படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனையடுத்து டிசம்பர் 21ல் ஜெயம் ரவி நடித்துள்ள “அடங்கமறு, அதர்வா நடித்துள்ள பூமராங், விஷ்னு விஷால் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் வெளிவரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று வெளியான மாரி 2 போஸ்டரில் டிசம்பர் 21ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார் தனுஷ்.
சங்கம் அனுமதியில்லாமல் திடீரென தனுஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் இது குறித்து ஆலோசிக்க விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் நாளை சந்தித்து பேசவுள்ளனர்.