தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி படம் 3.
இந்த படத்தில் தனுஷ் அண்ட் சிவகார்திகேயன் இணைந்து நடித்திருத்தனர். இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்த படத்தில் இடம் பெற்ற ‘கொல வெறி’ பாடல் வெளியாகி இன்றோது 9 ஆண்டுகள் ஆகிறது.
இந்த பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி யு டியூபில் வெளியானது.
இதே தேதியில் தான் மாரி 2 படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடலும் வெளியானது.
அந்த பாடல் தற்போது வரை 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.( 100 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.)
இந்த பாடலுக்கு யுவன் இசையமைத்திருந்தார். நடனத்தை பிரபுதேவா அமைத்திருத்தார்.
ஒரே நாளில் தனுஷின் 2 பாடல்கள் பெரும் சாதனை படைத்திருப்பது குறித்து தனுஷ் தன் ட்விட்டரில்…
‘கொலவெறிடி’ பாடல் வெளியான 9வது ஆண்டு தினத்தில் ‘ரௌடி பேபி’ பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.
தென்னிந்திய அளவில் முதல் முறையாக 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளதற்கு நாங்கள் கௌரவமாக நினைக்கிறோம். எங்கள் மொத்த குழுவும் எங்கள் இதயத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
Massive – Rowdy baby hits 1 billion views on youtube