தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2002 ஆண்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பெரும் பரபரப்பை கிளப்பி வெளியான திரைப்படம் ‘பாபா’.
கதை திரைக்கதை எழுதி இந்த படத்தை ரஜினிகாந்த் தயாரித்து இருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.
தற்போது சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி ரீ-ரீலீஸ் ஆகிறது.
எனவே சில காட்சிகளை இணைத்துள்ளனர். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் டப்பிங் பேசி இருந்தார்.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த படத்திற்கு தற்போது எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது.
எனவே தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளும் பாபா படத்தை மீண்டும் திரையிட உள்ளனர்.
அதுவும் நள்ளிரவு ஒரு மணி காட்சி அதிகாலை 4:00 மணி காட்சி என சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட உள்ளதாக திரையரங்குகள் அறிவித்துள்ளன.
ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பாபா-வை மீண்டும் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்…
‘படையப்பா’ படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்த பாபா படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த படத்தின் வெளியீட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சி பெரும் தடைகள் விதித்தது. மேலும் பாபா படத்தில இடம்பெற்ற பாடல்களும் சர்ச்சையானது. அந்த பாடல் வரிகளுக்கு திராவிட கழகமும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இப்படி பல சர்ச்சைகளைக் கிளப்பிய பாபா மீண்டும் ரீ ரிலீஸ் ஆவதில் அதே பிரச்சினை ஏற்படுமா ? அதே பரபரப்பு உண்டாகுமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்…
Lyca grabbed overseas rights of Baba movie