தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’.
லோகேஷ் இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசன் பகத்பாசில், விஜய் சேதுபதி சூர்யா, காளிதாஸ், நரேன், ஷிவானி, மைனா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம் ஜூன் 3ம் தேதி வெளியானது.
இப்படம் வெளியான முதல்நாள் முதலே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.
படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்து விட்ட போதிலும் இன்றும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் மொத்த வசூல் மட்டும் இதுவரை ரூ.350 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் சூர்யா நடித்த ரோலஸ் கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.
விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் ரோலஸ் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என நடிகர் கமல்ஹாசனே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பகத் பாசில் நடித்த அமர் என்ற கேரக்டரையும் மெருகேற்றி ஒரு புதிய கதையை உருவாக்க போகிறாராம் லோகேஷ்.
கமலின் ‘விக்ரம்’ கேரக்டர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் பகத்தின் அமர் கேரக்டர் என ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியாக கதைகளை அமைத்து மூன்றையும் ஒன்றாக இணைக்க திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ்.
இதில் அமர் கேரக்டரின் முந்தைய காலகட்டம் சொல்லப்படும் என தெரியவந்துள்ளது.
மேலும் விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி நடித்த கைதி படத்தின் காட்சிகள் இடம் பெற்றது. எனவே கார்த்தியின் டெல்லி கேரக்டரும் அடுத்த பாகத்தில் இடம் பெறும் என நம்பலாம்.
எனவே கைதி மற்றும் விக்ரம் படங்களின் தொடர்புள்ள காட்சிகளும் அடுத்த பாகத்தில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
Lokesh Kanagaraj talks about his upcoming films