தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னத்திரையில் இருந்தாலும் தமிழக சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை விஜே. சித்ரா
இவர் சின்னத்திரையில் விஜே ஆகவும் பணிபுரிந்துள்ளார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் மர்மமாகவே உள்ளது.
இதன் முதற்கட்ட விசாரணையில் அவரது கணவர் ஹேமந்தை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
நடிகை சித்ராவின் மரண வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சித்ராவின் மரணம் குறித்து இவரது கணவர் பல அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்துள்ளார்.
தன் மனைவி சித்ராவின் தற்கொலை பின்னணியில், பலம் வாய்ந்த அரசியல் புள்ளிகள் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு கும்பல் தன்னை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் புள்ளிகள் மற்றும் பணம் பறிக்க முயற்சிக்கும் கும்பல் என இருதரப்பிலும் இருந்து தமக்கு மிரட்டல் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஹேமந்த் அளித்துள்ள புகாரில்…
என் மனைவி சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது சேறு வாரி இறைத்தவர்கள் முன்பு, நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கவே இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
அவரின் தற்கொலைக்கு பிறகு, பணபலமும், அரசியல் பலமும் கொண்ட மாபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரிந்த உண்மை.
அவர்களின் பண பலத்துக்கு முன்னால், என்னை போன்ற சாதாரண மனிதனால் எதுவும் செய்ய இயலாது.
என் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கும்பலின் பெயரை வெளியில் சொன்னால், என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவோம் என்று சிலர் மிரட்டுகிறார்கள்.
உயிருக்கு பயந்து என் வீட்டிலிருந்து வெளியேறி இன்னொரு இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளேன்.. என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கி என்னுடைய உயிரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். ‘ என்று ஹேம்நாத் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
Late actress Chithra husband talks about her death