தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 9 தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை சித்ரா.
அவரது மரணம் தற்கொலைதான் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.
அவர் தற்கொலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது தொடர்பாக அவரை பதிவு திருமணம் செய்த கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஒரு பெண் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் உயிரிழந்தால் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்வது வழக்கம் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
எனவே அதன்படி சித்ராவின் தாயார் விஜயா, தந்தை காமராஜ் மற்றும் அக்கா சரஸ்வதி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.
விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சித்ராவின் தாயார் விஜயா.. தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு, அவரின் கணவர் ஹேம்நாத்தான் காரணம் என மீண்டும் குற்றம் சாட்டினார்.
மேலும் தனக்கும், தன் மகள் சித்ராவுக்கும் எந்தவொரு மனக்கசப்பும் இல்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் சித்ரா கணவர் ஹேம்நாத்.
Chennai police arrested Chitra’s husabnd Hemanath Kumar