தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை புகழ் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது கணவர் ஹேமந்த் உடனிருந்துள்ளார்.
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது அம்மா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
சித்ராவின் உடலை 2 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
நடிகை சித்ரா தற்கொலை..; இனி ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லையாக நடிப்பவர் இவர்தான்..
இந்த பிரேத பரிசோதனையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என உறுதியாகியுள்ளது.
அவரது கன்னத்தில் இருந்த நகக்கீரல் சித்ராவின் நகக்கீறல் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம்? என போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Police confirms Chitra’s cause of death