தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்தாண்டு டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் சின்னத்திரை நடிகை விஜே சித்ரா.
எனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களுடன் விசாரணை நடத்தினர்.
அதன்படி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை டிசம்பர் 14ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஹேம்நாத்.
அவர் தன் மனுவில்…”சீரியல்களில் நடிக்கக் கூடாது எனவோ சித்ரா நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை
தனக்கும், சித்ராவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
எனவே தனக்கு ஜாமீன் வழங்க மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் ஹேமநாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் சார்பிலும், அவரது நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது,
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில்… “சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதார். அதனால்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Police report on Chithra suicide case