தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
முக்கியமாக தமிழகத்தில் 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க ஆண்டுதோறும் சென்று வருகின்றனர்.
ஆனால் இந்த வருடம் தமிழக பக்தர்கள் ரசிகர்கள் என்ற போர்வையில் திரைப்பட பேனர்களை கொண்டு சென்று படங்கள் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதல் செய்துள்ளனர்.
விஜய் ரசிகர்கள் வாரிசு பட பேனர் உடனும்.. அஜித் ரசிகர்கள் துணிவு பட பேனருடனும் சென்று உள்ளனர். அவர்கள் ஐயப்பனை தரிசித்து தங்கள் ஹீரோக்களின் படங்கள் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதல்கள் செய்து அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து கேரளா ஐகோர்ட் இந்த ரசிகர்களை கண்டித்துள்ளது. இதுபோன்ற படங்களை கொண்டு வரக்கூடாது.. ஐயப்பன் சன்னிதானத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று ரஜினி ரசிகர்கள் ‘ஜெயிலர்’ பட பேனருடன் சென்று படம் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கேரள காவல்துறை அவர்களை தடுத்து பேனரை பறித்துக் கொண்டு அவர்களை அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kerala high court has issued an order against rajini vijay ajith fans