கதிர் & யோகிபாபுவின் ‘ஜடா’வுக்கு யுஏ சர்ட்டிபிகேட்; டிசம்பர் 6 ரிலீஸ்

கதிர் & யோகிபாபுவின் ‘ஜடா’வுக்கு யுஏ சர்ட்டிபிகேட்; டிசம்பர் 6 ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kathirs Jada Censored UA and movie release date is hereநடிகர் கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் பொயட்ஸ்டுடியோ தயாரிக்கும் படம் “ஜடா”

இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நாயகியாக புதுமுக நடிகை ரோஷினி நடித்துள்ளார்.

பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக நடித்திருக்கிறாராம்.

யோகிபாபு வரும் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறதாம். விளையாட்டு கூடவே நகைச்சுவை சஸ்பென்ஸ் நிறைந்த படமாக இருக்கும்.

அனிருத் ஒரு பாடலை சாம் CS இசையில் பாடியிருக்கிறார்.

அப்பாடல் இந்த வருடத்தின் ஹிட் பாடலாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

படத்தின் வியாபாரமும் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் டிசம்பர் 6ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

Kathirs Jada Censored UA and movie release date is here

துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ பட ரிலீஸ் தள்ளிப்போனது

துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ பட ரிலீஸ் தள்ளிப்போனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aditya Varma censored A and movie release postponedகிரிசாயா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’.

பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை மறுநாள் நவம்பர் 8ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

எனவே ப்ரொமோஷன் பணியில் விக்ரம் மகன் துருவ் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

இப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. அதை எப்படியாவது ‘யுஏ’ சான்றாக மாற்ற படக்குழு முயற்சித்தனர்.

தற்போது சென்சாரில் ஏ சான்றிதழ் தான் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் சரக்கு அடித்தல், புகை பிடித்தல், போதைப் பொருள் உட்கொள்ளுதல், முத்தக் காட்சி, வன்முறைக் காட்சி என அனைத்தும் கலந்து இருப்பதால் இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் 21ம் தேதி ஆதித்ய வர்மா வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Aditya Varma censored A and movie release postponed

கீழடி அகழாய்வு குறித்து தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி

கீழடி அகழாய்வு குறித்து தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director bharathi rajaகீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நன்றி அறிக்கை.

கீழடி அகழாய்வு குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக நன்றி அறிக்கை

என் இனிய தமிழ் மக்களே!

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பிறகு இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துக்கு மாறாக சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம்.,அதாவது தமிழர் நாகரீகம் சிறந்து விளங்கியது என்பதற்கு சான்றாக திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி!

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,
சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரீகம் என்றும் சிலர் இந்து நாகரீகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.

அந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரீகம் என்பது தமிழரின் நாகரீகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள்.மேலும் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

தமிழரின் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டு முதல்வரான தமிழர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,”ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.அதுவும் தமிழ்நாடு தினம் கடைப்பிடிக்கப்படும் நவம்பர் 1ம் தேதி அறிவித்துள்ளார்.

நமது தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

– பாசத்துடன்

உங்கள் பாரதிராஜா

ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..

ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai in breaking newsஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..

ஜிகுனா படத்தை தயாரித்தவர் “திருக்கடல் உதயம்” இவர் தனது மூன்றாவது தயாரிப்பான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களுக்கு Visual Effects துறையில் இருந்து பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட்டு செய்கிறார்.

இயக்குனர் கூறுகையில்: ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷ்ன் படம், மிக பிரமாண்டமாக பொருள் செலவில் தயாராகிறது, இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம் மற்றும் Visual Effects யின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் பாதி படத்திற்கு மேல் Green மற்றும் Blue மேட்டிலேயே படமாக்கி வருகிறோம், காதல், எமோஷன், சென்டிமெண்டுடன் கலந்த கமர்சியல் படமாக தயாராகிறது இவ்வாறு இயக்குனர் கூறினார்.

ஜெய், அறிமுக நாயகி பானு, சுறா படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ், இருவரும் இந்த படத்தில் வில்லன்களாக வருகிறார்கள், ஜெ பிரகாஷ், இந்தரஜா, சந்தானா பாரதி, மோகன் ராம், பழ கருப்பையா P.L. தேனப்பன் மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ஜானி லால்,எடிட்டிங் அன்ட்டனி, கலை N.M.மகேஷ், நடனம் ராதிகா, Visual Effects மேற்பார்வை தினேஷ் குமார், விஷால் பீட்டர் இசையமைக்க கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் அண்ட்ரோ பாண்டியன்.

கமலுக்கு இளையராஜா இசை விழா.; நவ. 9ல் இருந்து 17க்கு மாறியது.!

கமலுக்கு இளையராஜா இசை விழா.; நவ. 9ல் இருந்து 17க்கு மாறியது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan ilaiyaraajaநடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் மற்றும் சினிமாவில் அவர் கடந்த 60 ஆண்டுகள் ஆகிய இரண்டையும் கொண்டாடும் விதமாக நவ., 7, 8, 9 தேதிகளில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டன.

தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் .,7ல் பரமக்குடியில் தன் தந்தையின் சிலையை அவரது இல்லத்தில் திறந்து வைக்கிறார் கமல்.

அதற்கு அடுத்த நாள் நவ.,8ல் எல்டாமஸ் ரோட்டில் உள்ள தனது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தையும், இவரின் சினிமா குருநாதரான மறைந்த கே.பாலச்சந்தரின் சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர் மாலை 3 மணிக்கு சத்யம் திரையரங்கில் ‛ஹேராம்’ படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது.

நவ.,9ஆம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் தற்போது நவ.,17க்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாய் நடக்கவுள்ள இந்த நிகழ்வில் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

அதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

விஜய்யை அடுத்து கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?

விஜய்யை அடுத்து கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal lokesh kanagarajமாநகரம் என்ற வெற்றிப் படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி என்ற படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய்யின் 64வது படத்தை இயக்கத் தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில், அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கமல் இவரை அழைத்து பேசியதாகவும் அப்போது அவருக்கு ஒரு ஒன் லைனை லோகேஷ் கூறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை கமலே தன் சொந்த நிறுவனமான ராஜ் கமல் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

More Articles
Follows