தென் ஆப்ரிக்கா ரயிலில் சண்டை போடும் ‘இந்தியன்’

தென் ஆப்ரிக்கா ரயிலில் சண்டை போடும் ‘இந்தியன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தைவான் நாட்டிற்கு கமல்ஹாசன், ஷங்கர் உள்பட படக்குழுவினர் சென்று இருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

’இந்தியன் 2’ படத்தின் தைவான் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தைவான் படப்பிடிப்பை முடித்துவிட்டு ’இந்தியன் 2’ பட குழுவினர் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு அதிரடி ஆக்சன் ரயில் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், தென் ஆப்பிரிக்க படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட ’இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kamal’s ‘Indian 2’ movie Taiwan schedule completes

விக்ரம் ரசிகர்களே.. தங்களுக்கு தங்கலானின் தங்கமான அப்டேட் இதோ..

விக்ரம் ரசிகர்களே.. தங்களுக்கு தங்கலானின் தங்கமான அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’.

இப்படத்தில் பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தங்கலான்

தற்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் என்று கூறப்படும் கோலார் தங்க வயலில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.

இந்த நிலையில், கோலார் தங்க வயலில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது என கூறப்படுகிறது.

தங்கலான்

Vikram starrer ‘Thangalaan’ KGF schedule wrapped up

BREAKING மருத்துவமனையில் குஷ்பூ அட்மிட்.; மக்களுக்கு அட்வைஸ்

BREAKING மருத்துவமனையில் குஷ்பூ அட்மிட்.; மக்களுக்கு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை, தயாரிப்பாளர், தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் என பன்முகம் கொண்டவர் நடிகை குஷ்பூ.

நடிகை குஷ்பூ காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக தற்போது ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில், குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில், “கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல் நிலை கடுமையாக பலவீனம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உடலில் ஏற்படும் அறிகுறிகளைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள், அதனைப் புறந்தள்ளி விடாதீர்கள். கவனிக்காமல் விட்டதால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளேன். விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். ஆனால் அது நீண்ட நாட்களாகும் என்று நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

குஷ்பூ விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Khusbhu admitted to the hospital

‘விடுதலை’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் அப்டேட் இதோ

‘விடுதலை’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான படம் ‘விடுதலை’.

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படம் மார்ச் 31 அன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனங்களும், வரவேற்பும், வசூலும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘விடுதலை’ படத்தை தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

நேற்று, படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

இப்படம் தெலுங்கில் ‘விடுதலா பார்ட் 1’ என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Here’s the Telugu title & release update of ‘Viduthalai’

தமிழக விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

தமிழக விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இறுதிச்சுற்று’ படம் நடிகர் மாதவனுக்கு இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கி வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

அது முதலே வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் மாதவன்.

இந்த படத்திற்குப் பிறகு மாதவன் இயக்கி நடித்த நம்பி நாராயணனின் வாழ்க்கை திரைப்படம் ‘தி ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட்’ மாபெரும் வெற்றி பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் மாதவனையும் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தற்போது ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் மாதவன். அதன் விவரம் வருமாறு…

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.‌

தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இதற்காக ஜி. டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது.

நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடிக்கிறார்.

Madhavan in lead Biopic of Miracle man GD Naidu

கீழடியில் சூர்யா – ஜோதிகா.; கோயிலில் நயன்தாரா – விக்னேஷ்.; நட்சத்திரங்களுக்காக மாறும் நடைமுறைகள்.!

கீழடியில் சூர்யா – ஜோதிகா.; கோயிலில் நயன்தாரா – விக்னேஷ்.; நட்சத்திரங்களுக்காக மாறும் நடைமுறைகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 6 தேதி கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்று உள்ளனர்.

ஆனால் நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜைக்குப் பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது.

நயன்தாரா - விக்னேஷ்

இருந்த போதிலும் நட்சத்திர தம்பதிக்காக மூடப்பட்ட கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் வெயிலில் காத்திருக்க இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு மட்டும் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதற்காக போலீஸ் அதிகாரிகளும் கோயில் நிர்வாக அதிகாரிகளும் அங்கு காத்திருந்தனர். ஆனால் பொது மக்களை உள்ளே அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் வெளியில் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

வழிபாடு நடத்திய பின்னர் கோயிலுக்கு வெளியே நயன்தாராவை சூழ்ந்து கொண்ட ரசிகைகள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நயன்தாரா - விக்னேஷ்

அப்போது, ரசிகை ஒருவர் தோள் மீது கை வைத்ததால் கடுப்பாகியுள்ளார் நயன்தாரா.

சில தினங்களுக்கு முன் மதுரையில் கீழடி பகுதியில் புதிதாக திறக்கப்பட்டு அரசு அருங்காட்சியத்திற்கு நடிகர் சூர்யா – ஜோதிகா உள்ளிட்டோர் குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

அப்போதும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வெளியில் வெயில் காத்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவு இருக்கலாம்.

சமீப காலமாக நட்சத்திரங்களுக்காக.. பணம் படைத்தவர்களுக்காக அரசு அதிகாரிகள் செயல்படுவது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Nayanthara and Vignesh Shivan Temple visit made controversy

More Articles
Follows