தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவுப்படம் இருக்கும்.
கமல்ஹாசனின் கனவுப்படம் மருதநாயகம் என்பது நாம் அறிந்ததே.
கடந்த 1997ஆம் ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்து ராணி எலிசபெத் இப்படத்தை தொடங்கி வைத்தார்.
முதல் 30 நிமிடம் படம் தயாரான நிலையில் படத்தின் பட்ஜெட் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.
இதன்பின்னர் கமல் பல படங்களில் நடித்து இயக்கினாலும் மருதநாயகம் நிலை அப்படியே இருந்தது.
இந்நிலையில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காக பிரிட்டன் சென்றுள்ள கமல், லைக்கா நிறுவன சேர்மன் சுபாஷ்கரனை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அப்போது அவர்கள் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு இப்படம் மீண்டும் உயிர் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், விஷ்ணுவர்தன், நாசர், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.