தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மைக்காலமாக தமிழ் சினிமா ஹீரோக்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா ஒரு படங்களில் நடித்து வருகின்றனர். இவை தமிழிலும் தயாராகி வருகிறது.
ஹீரோக்களை போல தமிழ் சினிமா டைரக்டர்களும் நேரடி தெலுங்கு படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் லிங்குசாமி ஆகியோர் தெலுங்கில் புதிய படங்களை இயக்கிவருகின்றனர்.
தற்போது இந்த வரிசையில் இயக்குனர் ஹரியும் இணைகிறார்.
தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை ஹரி இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
தற்போது அருண் விஜய் & ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘யானை’ படத்தை தமிழில் இயக்கியுள்ளார் ஹரி.
வருகின்ற மே 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
Is Tamil director Hari collaborating with Tollywood’s action hero ?