தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் பற்றிய நிறைய செய்திகளை பகிர்ந்து கொண்டே போகலாம். அப்படி ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்தவர் அவர்.
கடந்த சில ஆண்டுகளில் அவர் டிவி ரியால்ட்டி ஷோக்களில் பங்கேற்றார்.
அது குறித்து டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்…
”குழந்தைகள் பாடல் பாடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எஸ்பிபி அவரிடம் அனுமதி கேட்க சென்றேன்.
அப்போது அவர் ஒரு கன்டிசன் விதித்தார்.
தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒரு குழந்தை கூட அழுவதை நான் அனுமதிக்கமாட்டேன்.
அப்படி அழுதாலும் அதை காட்டி டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக பயன்படுத்தக்கூடாது” என்றார் எஸ்.பி.
அவரின் அந்த பார்வை டிவி நிகழ்ச்சிகள் மீதான என் எண்ணங்களையும் மாற்றியது.
இனி வரும் தலைமுறை உங்களுக்கு எப்போதும் நன்றிக் கடன்பட்டிருப்பார்கள்”
இவ்வாறு தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் பதிவிட்டுள்ளார்.
Interesting facts of late singer SPB